மணல் குவாரி அமைக்க கடும் எதிர்ப்பு

திருச்சி கொள்ளிடத்தில் மணல் குவாரி அமைக்க கடும் எதிர்ப்பு.

திருச்சி காவிரி கொள்ளிடத்தில் புதிய மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு
 

*இரண்டு அமைச்சர்கள் உள்ள திருச்சி மாவட்டத்தில், அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை (EIA) தமிழில் வழங்கும் நிலையில் - 132 பக்கம் கொண்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிக்கை தமிழில்* *வழங்காமல் மறைத்து, திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், விராகலூர் கிராமத்தில் 60 ஏக்கர் பரப்பளவில்  மணல் குவாரிக்கு, தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் அறிக்கை தமிழில் இல்லாத நிலையில், கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்க!!*

*தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் - காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்  அரசுக்கு கோரிக்கை!!*==========================
வணக்கம்

தமிழகத்தில் திமுக ஆட்சியில் நாளை 04-11-2023 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு திருச்சி முதன்முதலாக,  கனிம மாஃபியாக்கள் திண்டுக்கல் ரத்தினம் - புதுக்கோட்டை ராமச்சந்திரன்  கோலேச்சும் **திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், விராகலூர் கிராமத்தில் 60 ஏக்கர் பரப்பளவில்  மணல் குவாரிக்கான கருத்து கேட்பு கூட்டம் விரகலூர் செயின்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது*.

இந்த கருத்து கேட்பு கூட்டம், 45 வகையான ஆவணங்களை மறைத்தும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தமிழில் வழங்காமலும் சட்டப்படி இல்லாததால் ரத்து செய்ய கேட்டுக் கொள்கிறோம்.

45  ஆறுகள், ஆண்டு முழுக்க தண்ணீரோடு ஓடும் கேரளாவில் கடந்த 1992 முதல் 38 ஆண்டுகளாக  மணல் குவாரிகள் எதுவும் இல்லை. ஒரு கைப்பிடி மணலை கூட ஆறுகளில் அள்ள விடாமல் கேர்ள அரசு இயற்கை வளத்தைப் கண் போல் பாதுகாத்து பேணி வருகிறது.

ஆனால் 33 ஆறுகள் மட்டுமே உள்ள தமிழகத்தில், அறிவியல் முறைப்படி - இயற்கை மீண்டும் தன்னை  தகவமைத்துக் கொள்ளும் வகையில் ஆற்றில் மணலை அள்ளாமல் எந்த விதியும் பின்பற்றாமல் சட்டவிரோதமாக மணல் அள்ளப் பட்டதால், 160 ஆண்டுகள் அள்ள வேண்டிய மணலின் அளவு, கடந்த 30 ஆண்டுகளில் ஆற்றின் அடிமட்டம் வரை அள்ளப்பட்டு விட்டது.

காவிரி கொள்ளிடத்தில் அளவுக்கு மீறி மணல் கொள்ளையடிக்கப்பட்டு அள்ளப்பட்டதால், கட்டுமானம் வலுவிழந்து முக்கொம்பு அணையும்,  திருச்சி ஸ்ரீரங்கம் பாலமும் உடைந்தது. ஆனால் இதை அப்படியே திசை திருப்பி *அணைக்கு காய்ச்சல் வந்து விட்டது* என்று அன்று கேலி செய்து திசை திருப்பினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஆறுகள், ஆறு என்று சொல்லக்கூடிய அளவில் இல்லாமல், நீர் தாவரங்களும் நுண்ணுயிர்களும் மீன்களும் நீர்வாழ் உயிரினங்களும் இன்றி தனது இயல்பு நிலையை இழந்து விட்டது. 

ஆற்றின்  மட்டம் வரை மணல் சுரண்டப்பட்டு அள்ளப்பட்டு விட்டதால், ஆறுகளில் மணல் இல்லாததால், ஆறு முழுக்க படிந்துள்ள வண்டல் மண்ணில் சீமை கருவேலமரம் ஆக முளைத்துக் கிடக்கிறது.

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் உட்பட பல்வேறு அமைப்புகள், மக்கள் இயக்கங்கள் பல்வேறு அடக்குமுறைகளை - வழக்குகளை - மணல் கொள்ளையர்களால் தாக்குதலை எதிர்கொண்டு உறுதியாக நின்று,  2015 முதல் நடத்திய கரூர் மாவட்டம்,  திருச்சி கூகூர், வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் - களத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் நடந்த வீரமிக்க தொடர் போராட்டங்களின் விளைவாக, 2017 செப்டம்பர் முதல்
*உயர் நீதிமன்றம் ஆறுகளில் மணல் அள்ள தடை விதித்தது*.

அன்றைய ஆட்சியிலிருந்த எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு, உயர் நீதிமன்றம் உத்தரவினால் ஆற்று மணல் அள்ள தடை ஏற்பட்டதால், வெளிநாடுகளிலிருந்து பல்வேறு மாநிலங்கள் போல், *இயற்கை ஆற்றுமணல் மாதம் ஒன்றுக்கு 5 லட்சம் மெட்ரிக் டன் அளவு இறக்குமதி செய்ய அரசாணை வெளியிட்டது*

இன்றைய தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களால் 2017-ல், ஆற்றுமணலுக்கு மாற்றாக தெரிவிக்கப்பட்ட
வெளிநாடுகளில் இருந்து
இயற்கை ஆற்றுமணல் மாதம் ஒன்றுக்கு 5 லட்சம் மெட்ரிக் டன் அளவு இறக்குமதி செய்ய உத்திரவிட்ட அரசாணை, ஜூன்- 2022 வரை நடைமுறையில் இருந்தது.

வெளிநாடுகளில் இருந்து இயற்கை ஆற்றுமணல் இறக்குமதி செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டாலும், தமிழக அரசு அதை முறையாகச் செய்யாமல், பல்வேறு நபர்களின் சட்ட விரோத கொள்ளைக்காகவே *செயற்கை மணல் எம் சாண்ட் (கல் குவாரிகள் மூலம்) உற்பத்தியை மட்டுமே ஊக்குவித்தது*

இதனால் தமிழகம் முழுவதும், பல்வேறு மலைகள் அழிக்கப்படும், அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட சுரங்கத் திட்டத்தில்  கொடுத்த அளவிற்கு மேல் நிலத்திற்கு அடியில் சட்டவிரோதமாக வெட்டி எடுத்ததால், எண்ணற்ற சூழலியல் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில்தான் அதிகம் வெப்பம் என்பது போய், காவிரி நொய்யல் அமராவதி குடகனாறு என நான்கு ஆறுகள் ஓடும் கரூர் மாவட்டத்தில்தான் இன்று கல்குவாரி அதிகமாகி கரூர் மாவட்டம் பரமத்தி தமிழ்நாட்டில் மிக அதிகமான வெப்பம் நிலவுகின்ற பகுதியாக மாறிவிட்டது.

கடந்த இரண்டு ஆண்டில் மட்டும் திண்டுக்கல்லில் கீரனூர் பகுதியில் 1.50 ரிக்டர் அளவு நிலநடுக்கம், கரூர் மாவட்டத்தில் 3.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம், வேலூரில் நிலநடுக்கம், நெல்லையில் நிலநடுக்கம், திருப்பூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மூன்று முறை நிலநடுக்கம்,: ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் நிலநடுக்கம்
என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

எனவே காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் தொடர்ந்து தமிழக ஆறுகளில் புதிதாக மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மணல் குவாரி அமைக்க, எம் சாண்ட் க்கு எதிர்ப்பு தெரிவித்தால் வீடு கட்ட மணலுக்கு என்ன செய்வது என்ற கேள்வி இயற்கையாக அனைவர் முன் எழும்.

ஒரு இயற்கை அழிவை தடுத்து நிறுத்த கோரிக்கை முன் வைக்கும் பொழுது, அதற்கான மாற்று சொல்லாமல் எப்போதும் அந்த கோரிக்கையை நாங்கள் முன்வைப்பது இல்லை.

ஆறுகளில் மணல் குவாரி அமைப்பதற்கு மாற்றாக,
இதற்கு ஏற்கனவே *தமிழக அரசு அறிவித்து நடைமுறையில் தற்போது 2022 வரை இருந்த, வெளிநாடுகளில் இருந்து இயற்கை ஆற்றுமணல் மாதம் ஒன்றுக்கு 5 லட்சம் மெட்ரிக் டன் அளவு இறக்குமதி என்பதை மாதம் 15 லட்சம் மெட்ரிக் டன் என்ற அளவாக உயர்த்தி இறக்குமதி செய்ய வேண்டும்*  என்ற கோரிக்கையை கடந்த இரண்டாண்டாக அரசுக்கு தெரிவித்து வருகிறோம்.

இவ்வாறு மாதம் ஒன்றுக்கு 15 லட்சம் மெட்ரிக் டன் வெளிநாட்டு இயற்கை ஆற்று மணலை இறக்குமதி செய்வதன் மூலம், தமிழகத்தின் தேவையான தினசரி சுமார் 21,000  லாரி லோடுகள் தமிழகம் முழுக்க கட்டுமானப் பணிகளுக்கு கொடுக்க முடியும்.

வெளிநாட்டு இயற்கை ஆற்றுமணல் டன் ஒன்றுக்கு சுமார் 1,000/= க்கு இறக்குமதி செய்து கொடுக்க,  நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் தயாராக உள்ளது.

எனவே தமிழக அரசு கொள்கை ரீதியாகவே, ஆறுகளில் புதிதாக மணல் குவாரி அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். 
வெளிநாட்டு இயற்கை ஆற்று மணலை இறக்குமதி செய்வதை தீவிரப்படுத்த வேண்டும்.

மேலும் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் தொடர்ந்து ஐந்தாண்டுகளாக, தமிழகத்தில் உள்ள 33 ஆறுகளிலும் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளை முறையாக அறிவியல் அடிப்படையில் தூர்வாரினாலே, தமிழகத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு தேவையான மணல் கிடைக்கும் என தெரிவித்து வருகிறது. இதே கருத்தை  தமிழக மூத்த பொதுப்பணித்துறை
பொறியாளர் சங்கமும் அதன் தலைவர் மதிப்பிற்குரிய பொறியாளர் வீரப்பன் அவர்களும் அரசுக்கு தெரிவித்து வருகிறார். 

மனிதனால் உருவாக்க முடியாத இயற்கை வளத்தை அழிக்கும் செயலை தடுத்து நிறுத்த காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் மற்றும் மூத்த பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கம் பல்வேறு அமைப்புகள் தெரிவித்த கோரிக்கை அடிப்படையில், கடந்த சில மாத முன்பு ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை தூர்வாரும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.

தூர்வாருகிறோம் என்ற பெயரில் பல்வேறு சட்ட விரோதமான செயல்கள் ஸ்ரீவைகுண்டம் அணைப்பகுதியில் அதிமுக ஆட்சியில் 2015- இல் நடைபெற்றது. விடுதலைப் போராளி, பொதுவுடமை இயக்க மூத்த தலைவர் அய்யா நல்லகண்ணு அவர்கள் தலைமையில் அனைவரும் இணைந்து போராடி அதை தூர் வாருகிறோம்  என்ற பெயரில் சட்டவிரோதமாக நடந்த மணல் கொள்ளையை போராடி தடுத்து நிறுத்தினோம்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை பகுதிகளிலும், தூர்வாருகிறோம்
என்ற பெயரில் சட்ட விரோதமான மணல் கொள்ளை அடிக்கும் செயல்களை தடுக்க தொடர்ந்து விழிப்புடன் போராடி வருகிறோம்.

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த மணல் குவாரிகள் அனைத்தும் சட்ட விரோதமாக இயங்குகிறது என்று, கடந்த செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறை (ED) சோதனை மூலமும், அக்டோபர் மாதம் தொடர்ந்து டிரோன் மூலம் டிஜிட்டல் சர்வே செய்து அமலாக்கத்துறை சோதனை நடத்தி அம்பலமாகி உள்ளது. குறிப்பாக கரூர் திருச்சி தஞ்சை புதுக்கோட்டை அரியலூர்  உள்ளிட்ட பல மாவட்டங்களில் மணல் மாஃபியா புதுக்கோட்டை ராமச்சந்திரன் - திண்டுக்கல் ரத்தினம் மூலம், அரசு மணல் குவாரிகளில் நடந்த அட்டூழியம் அம்பலம் ஆகியுள்ளது.

கரூர் மாவட்டத்தில், கடந்த அக்டோபர்' 4-2023 ஆம் தேதி நடைபெற இருக்கும் நெரூர் வடக்கு (40 ஏக்கர்), அச்சமபுரம் (60 ஏக்கர்) புதிய மணல் குவாரிக்கான கருத்து கேட்டு கூட்டத்திற்கு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை அரசு தமிழில் வழங்கி உள்ள நிலையில், அனைத்து ஆவணங்களையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் இணையதளத்தில் பதிவேற்று உள்ள நிலையில், கல்வி அமைச்சர் உள்ளிட்ட இரண்டு அமைச்சர்கள் உள்ள திருச்சி மாவட்டத்தில் மட்டும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தமிழில் வழங்காமல் இணையத்தில் பதிவேற்றம் செய்யாமல் மறைத்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. இது சட்டப்படி தவறானது.

மேலும் இணைப்பு ஆவணங்களில் 45 வகை ஆவணங்கள் பதிவேற்றம் செய்யாமல் மறைத்து இந்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. இது முழுக்க முழுக்க அநீதியான, அறமற்ற செயலாகும்.

https://tnpcb.gov.in/pdf/ph/EIARptEngVirahalur21923.pdf 

லிங்க் உள்ள, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தமிழில் வெளியிடாததால், பெரும்பாலான மக்கள் தங்களுடைய தாய் மொழியில் படித்து புரிந்து கொள்ள முடியாத நிலையில்,  கடந்த காலங்களில் நாங்கள் ஆதாரப்பூர்வமாக தெரிவித்ததன் பேரில் புதுக்கோட்டை - தூத்துக்குடி - திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கருத்து கேட்டு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனவே மூத்த அமைச்சர் நேரு அவர்கள், கல்வி அமைச்சர் உள்ள அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள திருச்சி  மாவட்டத்திலும், இந்த விரகலூர் மணல்குவாரி கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாடு அரசு ஜனநாயக அடிப்படையில், செயல்பட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
 
இயற்கை பாதுகாக்க, சுற்றுச்சூழலை பாதுகாக்க, கனிம கொள்ளை நடைபெறாமல் தடுக்க,
 உண்மையின் குரலை ஓங்கி ஒலிப்போம்.

இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், கட்சி சார்பற்ற
தமிழக விவசாயிகள்  சங்கம் அய்யா ம.ப.சின்னத்துரை,  காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ந.சண்முகம்,  விஜயன், மூத்த வழக்கறிஞர் கென்னடி, வழக்கறிஞர் கமருதீன், சாமானிய மக்கள் நலக் கட்சி திருச்சி மாவட்ட விவசாய அணி பொறுப்பாளர் ஜோசப் உள்ளிட்ட பொறுப்பாளர்கள், 
சூழலியல் செயல்பாட்டாளர் மோகன்ராஜ்,  உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களும் மக்கள் நலன் பேணும் அமைப்பினரும் பங்கேற்கின்றனர்.

இயற்கையை பாதுகாப்போம்!

*தமிழக ஆறுகளை மீண்டும் உயிர்ப்பிப்போம்!!*

@ இரா.சா.முகிலன்,
ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம்

 ந.சண்முகம் 
சு.விஜயன் 
சு. ராசேசுகண்ணன்
ஒருங்கிணைப்பாளர்கள், 
காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்
97919- 78786
73734 - 53038