மரித்துப்போன மனிதநேயம்:அதிவேகமாக திரும்பிய தனியார் பேருந்து: கீழே விழுந்த கல்லூரி மாணவன்
எந்திரமான உலகில் எதையும் கண்டுகொள்ளாமல் செல்வதே சாலச் சிறந்தது என்று தங்களுக்குள் ஒரு கொள்கையை வகுத்து விலகிச் செல்வதால் ஏற்படும் இழப்பு குறித்து இந்த சமுதாயம் சிந்திக்காமல் செல்வது தான் வேதனைக்குரியது

மரித்துப்போன மனிதநேயம்:
எந்திரமான உலகில் எதையும் கண்டுகொள்ளாமல் செல்வதே சாலச் சிறந்தது என்று தங்களுக்குள் ஒரு கொள்கையை வகுத்து விலகிச் செல்வதால் ஏற்படும் இழப்பு குறித்து இந்த சமுதாயம் சிந்திக்காமல் செல்வது தான் வேதனைக்குரியது.
ராசிபுரம் அருகே அபாயகரமான வளைவில் அதிவேகமாக திரும்பிய தனியார் பேருந்து: கீழே விழுந்த கல்லூரி மாணவன் : விழுந்த மாணவன் உயிருடன் இருக்கிறானா எனக் கூட பார்க்காமல் நிற்காமல் சென்ற தனியார் பேருந்து : அதைவிட உச்சக்கட்ட வேதனை பேருந்தில் பயணித்த ஒரு பயணி கூட பேருந்தை நிறுத்த வலியுறுத்தாததுதான்!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் வசிக்கும் சுரேஷ் மற்றும் அஷ்டலட்சுமி தம்பதியினரின் மகன் தரணிஷ் பாபு (20). சேலம் தனியார் கல்லூரியில் பி சி ஏ மூன்றாம் ஆண்டு படித்து வரும் இந்த மாணவன் சேலத்தில் இருந்து தனியார் பேருந்து மூலம் ராசிபுரம் நோக்கி வரும்போது சீட்டில் அமர்ந்து இருந்த மாணவன் மேம்பாலத்தின் வளைவில் பேருந்து அதிவேகமாக திரும்பியதால் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் இந்த மாணவனை காப்பாற்றாமல் தனியார் பேருந்தை நிறுத்தாமல் ஒட்டிச் சென்ற ஓட்டுநர் மற்றும் நடத்துனர் .
அதேபோல் அந்த பஸ்ஸில் பயணம் செய்த ஒரு பயணி கூட பேருந்தை பேருந்தை நிறுத்த வலியுறுத்தாதது மனித உயிர் துச்சமாக மதிக்கப்படுவதும் மனிதநேயம் மறந்து போனது தான் காரணம் என பெற்றோர்கள் வேதனை: பேருந்தில் இருந்து மாணவன் கீழே விழுந்தது குறித்தும் பேருந்து நிறுத்தாமல் சென்றது குறித்தும் ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.