போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காத வாகனங்களுக்கு அபராதம் | VEHICLE INSPECION

போக்குவரத்து விதிகளை பின்பற்றுவோம் என உறுதிமொழி-ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா

நாமக்கல்:ராசிபுரம் அடுத்த சேந்தமங்கலம் பிரிவுச் சாலையில் ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் திடீர் ஆய்வு...

போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காத வாகனங்களுக்கு ரூ.98,500 அபராதம் விதிப்பு. ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஒட்டிகளை நிறுத்தி அபராதம் விதித்ததுடன் ஒவ்வொரும் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுவோம் என உறுதிமொழி எடுக்க வைத்து அவர்களின் மனைவிகளுக்கும் அறிவுரை கூறி அனுப்பினார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா தலைமையிலான அதிகாரிகள் ராசிபுரம் அருகே சேந்தமங்கலம் பிரிவுச் சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது தடையை மீறி பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தனர். மேலும், பல்வேறு போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் கடைபிடிக்கின்றனரா? என வாகனங்களை நிறுத்தி ஆய்வு செய்தார்.

இதில், பர்மிட் இல்லாதது, இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், வாகனத்தை புதுப்பிக்காமலும், வாகனத்திற்குரிய சான்றிதழ் இல்லாமல் இயங்கிய 20 க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு, 28 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்தார். மேலும், ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டிய 9 பேருக்கு தலா ஆயிரம் வீதம் 9 ஆயிரம் ரூபாய், பேருந்தில் பயன்படுத்திய 2 ஏர் ஹாரனுக்கு ரூ. 20 ஆயிரம் மற்றும் செல்போன் பேசி கொண்டு வாகனம் ஒட்டிய 2 பேருக்கு தலா 500 வீதம் ஆயிரம், ஒவர் லோடு ஏற்றி வந்த வாகனத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். @villigal புதிய பஸ் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் சாலைப்போக்குவரத்து விதிகளை மதிப்போம் என உறுதிமொழி...#rasipuram #RTO_VEHICLE_INSPECION_FINE #rasipuram #namakkal #fine