வையப்பமலைஸ்ரீ மஹா மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா தீர்த்த குடம்

நாமக்கல்:திருச்செங்கோடு வையப்பமலைஸ்ரீ மஹா மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா தீர்த்த குடம்

நாமக்கல்:திருச்செங்கோடு வையப்பமலைஸ்ரீ மஹா மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா தீர்த்த குடம்

வைய்யபமலை ஸ்ரீ மகா மாரியம்மன் மகா கும்பாபிஷேக விழா முன்னிட்டு தீர்த்த குடம் முளைப்பாளிகை எடுத்து பக்தி பரவசத்தில் பக்தர்கள் ஊர்வலம்..

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த வையப்பமலையில் பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி ஸ்ரீ மகா மாரியம்மன் மகா கும்பாபிஷேக விழா முன்னிட்டு தீர்த்த குடம் முளைப்பாளிகை எடுத்து பக்தர்கள் ஊர்வலம் சென்றனர்..

கடந்த ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த கால் நடப்பட்டு, அதனை தொடர்ந்து இன்று ஆத்ம லிங்கேஸ்வரர் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் பால் குடம் மற்றும் தீர்த்த குடம் எடுத்து பக்தி பரவசத்தில் பக்தர்கள் மலையை சுற்றி ஆலயத்திற்கு சென்றனர்..

இவ்விழாவில் சிறப்பு அம்சமாக தீர்த்தக் குடத்தை யானையின் மேல் அமர்ந்த நிலையில் வைத்து அர்ச்சகர் உமா சிவ குருக்கள் தீர்த்த குடத்துடன் வையப்ப மலையை சுற்றி வலம் வந்தனர்..

மேலும், ஒட்டகம், குதிரை, பசு கன்றுடன் மற்றும் காளைகள் செண்டை மேளத்துடன் தீர்த்த குடம் மற்றும் முளைப்பாலிகை எடுத்து வந்த பக்தர்கள் மூன்று மணி நேரம் கடந்து ஆலயம் சென்றனர்.. செண்டை மேளம் இராகத்திற்கு ஏற்ப்ப குதிரைகள் நடனம் ஆடும் நிகழ்வு வழி நெடுவில் இருந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.