தூக்கி வீசப்பட்ட இருசக்கர வாகனம் | பரபரப்பு சிசிடிவி காட்சி | CCTV | VIRAL | ACCIDENT
இராசிபுரம்:அதிவேக கார் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை அடித்து தூக்கி வீசும் சிசிடிவி காட்சிகள் வெளியானது.ஒருவர் பலி,ஒருவர் கவலைக்கிடம்
இராசிபுரம்:அதிவேக கார் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை அடித்து தூக்கி வீசும் சிசிடிவி காட்சிகள்
ஒருவர் பலி,ஒருவர் கவலைக்கிடம்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆத்தூர் செல்லும் சாலையில் உள்ள ஒரியண்ட் பேக்கரி எதிரில் நடந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒடுவன்குறிச்சியை சேர்ந்த மகேஸ்வரன்(53) பலியான நிலையில் , ராசிபுரம் கோனேரிப்பட்டி சேர்ந்த மாரிமுத்து பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் ஐடி கம்பெனியில் வேலை செய்யும் சரத் (26) என்பவர் தனது காரில் ஆத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது ராசிபுரம் அருகே கார் வருவதை கவனிக்காமல் திடீரென சாலை கடத்த இரு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியதில் இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டு அதில் பயணம் செய்த 2 பேரும் பலத்த காயங்களுடன் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மகேஸ்வரன் என்பவர் உயிரிழந்தார் .
சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட நாமகிரிப்பேட்டை போலீசார் காரை ஓட்டி வந்த சரத் மீது வழக்கு பதிந்து விசாரணை. விபத்து நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது .