தமிழ்நாட்டில் அதிகரித்த நாய்க்கடி சம்பவங்கள்.. அதிர்ச்சியளிக்கும் தரவுகள்
2022ம் ஆண்டைக் காட்டிலும் தமிழ்நாட்டில் நாய்க்கடி பாதிப்பு எண்ணிக்கை 2 மடங்காக உயர்வு. ரேபிஸ் பாதிப்பால் உயிரிழப்பு எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிப்பு. ???? நாய்க்கடி சம்பவங்கள் - 2022 / 3.65 லட்சம் பேர் - 2024 / 6.41 லட்சம் பேர் ???? ரேபிஸ் உயிரிழப்புகள் - 2023 / 22 பேர் - 2024 / 34 பேர் - (அக்.01 வரை)
ஒரு மாத காலத்தில் 20 க்கும் மேற்ப்பட்ட ஆடுகளை கடித்த வெறி நாய்கள் அதில் நான்கு நாடுகள் பலி
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த பட்டணம் பகுதி பரமேஷ்வரன் நகர் மற்றும் சக்தி நகர் பகுதியில் கடந்த ஒரு மாத காலத்தில் 20க்கும் மேற்பட்ட ஆடுகளை வெறிநாய்கள் கடித்துள்ளது. இதில் நான்கு ஆடுகள் இறந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
பட்டணம் பகுதி பரமேஷ்வரன் நகர் பகுதியை சேர்ந்த நடேசன் 55 என்பவரின் வீட்டின் முன் கட்டி இருந்த 5 ஆடுகளை 10 க்கும் மேற்ப்பட்ட வெறி நாய்கள் கடித்ததில் ஒரு ஆடு இறந்ததாகவும் நான்கு ஆடுகளுக்கு கழுத்து மற்றும் கால் பகுதிகளில் அதிகமாக காயம் ஏற்ப்பட்டிருப்பதாகவும் கூறினர்.
மேலும் அதே பகுதி சக்தி நகரை சேர்ந்த பூங்கொடி என்பவரின் நான்கு ஆடுகளை வெறிநாய் கடித்தில் ஒரு ஆடு இறந்துள்ளதாகவும் மேலும் ஒரு ஆட்டின் கழுத்தின எழும்பு பாதிக்கப்பட்டு தலையை அசைக்க முடியாத நிலையில் உள்ளது.
இதுப்போன்று அப்பகுதியில் 20 க்கும் மேற்ப்பட்ட ஆடுகளை 10 க்கும் மேற்ப்பட்ட வெறி நாய்கள் கடித்ததில் நான்கு ஆடுகள் இறந்த நிலையில் மற்ற ஆடுகளுக்கு கழுத்து,கால்,வயிறு போன்ற பகுதி காயம் ஏற்பட்டுள்ளதாக கூறினர். ஒரு மாத காலமாகவே ஒவ்வொரு ஆடாக வெறி நாய் கடித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் தலைவரிடம் கூறிய போது பஞ்சாயத்து தலைவர் பஞ்சாயத்து அதிகாரிகள் உட்பட அனைவரும் நாய்களை பிடிப்பதற்கு எங்களுக்கு அதிகாரமில்லை மாவட்ட கலெக்டர் ஆனை பிறப்பித்தால் நாங்கள் நாய்களை பிடிப்போம் என்று கூறியுள்ளனர்.
இதனை அடுத்து உங்களுடைய கால் நடைகளை நீங்கள் தான் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அதற்கு அப்பகுதி மக்கள் வெறிநாய்கள் ஆடுகளை கடித்தால் பரவாயில்லை குழந்தைகளை கடித்தால் என்ன செய்வது பெரிய ஆட்களையே துரத்தி துரத்தி கடிக்க வருகிறது என்று கூறினர்.எனவே இது சமந்தமாக பட்டணம் பேரூராட்சி தலைவர் இதற்கு தகுந்த நடை வடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.