108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் கொண்டாடிய ஆயுத பூஜை

செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கு ஏற்றார் போல அவரவர் செய்யும் தொழில் பயன்படுத்தும் கருவிகளை ஆயுதமாக அம்மனின் முன் படைத்து ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது

108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் கொண்டாடிய ஆயுத பூஜை
108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் கொண்டாடிய ஆயுத பூஜை

நாமக்கல்லில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரிசையாக நிறுத்தி ஆயுத பூஜை கொண்டாடிய ஓட்டுனர்கள்

செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கு ஏற்றார் போல அவரவர் செய்யும் தொழில் பயன்படுத்தும் கருவிகளை ஆயுதமாக அம்மனின் முன் படைத்து ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.

எந்த தொழில் செய்பவர்களாக இருந்தாலும் அவர்கள் தொழிலுக்கு ஆதாரமாக இருக்கும் கருவி, வாகனம் எதுவாக இருந்தாலும் அதனை சுத்தம் செய்து அலங்கரித்து பூஜை செய்து வழிப்படுகின்றனர்.

அதன்படி நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகதில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர்கள் பயன்படுத்தும் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை சுத்தப்படுத்தி வாழை மற்றும் தோரணங்கள் கொண்டு அலங்கரித்து அம்மன் படங்களை வைத்து பூஜை செய்து ஆயுத பூஜைகளை கொண்டாடினர். இதில் 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்கள் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.