நவீன தீண்டாமை | தலைவியே ஆனாலும் "நீ தலித் தானே" | Casteism | Racism
முரண்பாடு: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம். ஆனால் தலித் என்பதால் நீ தலைவராக இருந்தாலும் கல்வெட்டில் பெயர் வராது... தலித் பெண் தலைவிக்கு நடந்த நவீன தீண்டாமை ...
இராசிபுரம்:பேரூராட்சிக்கு தலைவியே ஆனாலும் நீ தலித் தானே: கல்வெட்டில் பெண் தலைவரின் பெயர் புறக்கணிப்பு???
இந்துசமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் கல்வெட்டில் பெண் தலைவரின் பெயர் புறக்கணிப்பு "தலித்" என்பதால் நவீன தீண்டாமை என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!!!
"தலித்"என்பதால் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்த கொள்ள அனுமதிக்காத நிலையில் தற்போது இந்துசமய அறநிலையத்துறை கல்வெட்டில் கூட பெயர் பொறிக்கப்படாத தலித் பெண் பேரூராட்சி தலைவவியின் அவலம்!!!
நவீன தீண்டாமைக்கு இதுவும் சான்று!
தமிழகத்தில் சமூக மாற்றத்திற்கான பல முன்னெடுப்புகள் நடைபெற்ற போது தீண்டாமை ஒழிப்பில் நாம் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் உள்ளது என்பதை நிரூபிக்கிறது இந்த நிகழ்வு!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட இரா.புதுப்பட்டியில் கடந்த 3-09-2023 அன்று வெகு விமர்சையாக துலுக்க சூடாமணி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது...
நாமக்கல் மாவட்டம் மட்டுமன்றி தமிழ்நாடு முழுவதும் புகழ்பெற்ற இந்த துலுக்க சூடாமணி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்ற நிலையில் கும்பாபிஷேக பேனர்களில் புதுப்பட்டி பேரூராட்சி பெண தலைவர் பெயர் பொறிக்கப்படாமலும் , புகைப்படம் வைக்கப்படாமலும் 20க்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர்கள் விழா குழு வைத்தனர்.
பேரூராட்சி தலைவர் ஒரு தலித் என்பதாலேயே புதுப்பட்டி பேரூராட்சி பகுதியில் வசிக்கும் ஆதிக்க சாதியினர் உள்ள விழா குழுவினர் பேரூராட்சி பெண் தலைவா பெயர் மற்றும் படங்களை வைக்காமல் பிளக்ஸ் பேன்கர்கள் வைத்தால் சர்ச்சை எழுந்த நிலையில் அந்த பேனர்கள் உடனடியாக அகற்றப்பட்டது...
இந்நிலையில் தற்போது கும்பாபிஷேகம் நடைபெற்றதற்கான கல்வெட்டு தயாராகி கோயில் உள்ளே பதிப்பதற்கு வைக்கப்பட்டுள்ளது... இந்நிலையில் இந்த கல்வெட்டில் துணைத்தலைவர் ஜெயக்குமார் (திருப்பணி குழு தலைவர்) பெயர் பொறிக்கப்பட்ட நிலையில் பேரூராட்சியின் தலைவர் சுமதியின் பெயர் பொறிக்கப்படவில்லை என்பது தான் நவீன தீண்டாமைக்கு எடுத்துக்காட்டு என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்!
தீண்டாமை ஒழிந்து விட்டது என்று அரசியலமைப்பு சட்டம் சொன்னாலும் நடைமுறையில் தீண்டாமை நவீன வடிவங்களில் தொடரத்தான் செய்கிறது!!
மேலும் இந்த விழா குழுவானது கும்பாபிஷேக விழாவில் போலியான நன்கொடை ரசீது சீட்டு பயன்படுத்தி பல லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளதாகவும் தலித் பெண் தலைவரை தீண்டாமை கொடுமை செய்வதாகவும் கூறி இந்து சமய அறநிலையத்துறையில் புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இந்த விவகாரம் ஆளும் கட்சிக்கு அப்பகுதியில் மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு பேரூராட்சியின் தலைவரே தலித் என்பதால் புறக்கணிக்க பட்ட நிலையில் அப்பகுதியில் வாழும் தலித் மக்கள் அரசின் மீது அதிருப்தியில் உள்ளனர்.
நவீன தீண்டாமை குறித்து அப்பகுதியில் விசாரித்த போது இங்கு நடக்கும் எந்த நிகழ்ச்சியிலும் தலித் சமூகத்தை சேர்ந்த அவர்கள் பெயரை போடுவதில்லை அப்படியே சிலர் போட்டாலும் சிறிய எழுத்துக்களில் போடுவார்கள் என்றும்,தலித் சமூகத்தை சேர்ந்த நபருடன் சரிக்கு சமமாக அமர்ந்து பேசுவது தங்களுக்கு அவமானம் என கருதுகிறார்கள்.
நேரடியாக தீண்டாமையை காட்டுவதில்லை என்பதால் அது முழுமையாக மறைந்து விட்டது என்று இங்கு சொல்ல முடியாது!
சாதிய அடிப்படையிலான பாகுபாடு இன்றி இந்தியா எதிர்கொள்ளும் மிகவும் சிக்கலான மனித உரிமை பிரச்சனை!
தீண்டாமை எந்த வடிவத்தில் இருந்தாலும் அதை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில் இரா.புதுப்பட்டி பேரூராட்சி பெண் தலைவர் தலித் என்பதால் தீண்டாமை கொடுமையில் சிக்கித் தவித்து வருவதை உடனடியாக கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.