ராசிபுரம் அரசு மருத்துவமனை பிரசவ வார்டு பகுதியில் மீண்டும் வெள்ளம் | Heavy Rain | Rasipuram Government Hospital

புதிய பஸ் நிலையத்தில் முழங்கால் அளவிற்கு கழிவு நீருடன் மழை நீர் தேங்கியதால் பேருந்து பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

15 நிமிட கனமழைக்கே வெள்ளம் சூழ்ந்து காட்சி தரும் ராசிபுரம் நகரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகலான நாமகிரிப்பேட்டை,மங்களபுரம்,மெட்டாலா, வடுகம், புதுப்பட்டி,உள்ளிட்ட பகுதியில் இரண்டாவது நாளாக காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

ராசிபுரம் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக தற்போது 15 நிமிடம் கனமழை பெய்த நிலையில் சற்று குறைந்து சாரல் மழையாக பெய்து வருகிறது.

காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் இருந்த நிலையில் 15 நிமிடம் காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது . இந்நிலையில் ராசிபுரத்தின் முக்கிய பகுதிகளான பழைய பஸ் நிலையம் புதிய பஸ் நிலையம் மற்றும் அண்ணா சாலை பகுதிகளில் முழங்கால் அளவிற்கு மழை நீருடன் கழிவு நீர் கலந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

குறிப்பாக புதிய பஸ் நிலையத்தில் முழங்கால் அளவிற்கு கழிவு நீருடன் மழை நீர் தேங்கியதால் பேருந்து பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். அதேபோல் பழைய பஸ் நிலையம் ஒரு வழி பாதையில் சாக்கடைகளில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக தண்ணீர் பீறிட்டு வெளியே வந்து கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் உருண்டு செல்லும் காட்சிகளும் இருசக்கர வாகனங்கள் பழுதான காட்சிகளும் நேற்று நடந்தது போலவே இன்றும் கனமழைக்கு ராசிபுரம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் .