பெண்கள் தனியா போக முடியல சார்-கொல்லிமலையில் குடிமகன்களின் அட்டகாசம்.

விடிய-விடிய-சந்துகடைகள்-பெண்கள்-தனியா-போக-முடியல-சார்

கொல்லிமலையில் குடிமகன்களின் அட்டகாசம்... விடிய விடிய சந்துகடைகள்... பெண்கள் தனியா போகமுடியல சார்

நீதிபதியிடமே கொடுத்த சந்துக்கடை புகார்..

சந்துக்கடையால் தங்களின் குடும்பம் அழிவதாக மாவட்ட சார்பு நீதிபதி விஜய் கார்த்தி இடம் மலைவாழ் பெண்கள் புகார் மனு அளித்தனர்...

இதுகுறித்து மலைவாழ் பெண்கள் கூறுகையில்: கடந்த இரண்டு வருடங்களாக கொல்லிமலையில் 50-க்கும் மேற்பட்ட சந்து கடைகள் விடிய விடிய செயல்படுவதால் தங்களின் குடுபத்தின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். சந்தக் கடைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ,மாவட்ட கண்காணிப்பாளர்,வாழவந்தி நாடு காவல் நிலையம் என பல முறை புகார்கள் கொடுத்தும் சந்துக்கடைகள் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்வது வேதனை அளிப்பதாக தெரிவித்தனர்... காலை 5 மணிக்கு சந்தக் கடைகள் மூலம் அதிக விலைக்கு மதுவாங்கி குடித்துவிட்டு சாலைகளில் பெண்களிடம் தகராறு செய்வதும், பள்ளிக்கு செல்லும் மாணவிகளிடம் தகராறுகள் செய்வதுமாக குடிமகன்கள் இருப்பதால் கொல்லிமலை மலைவாழ் மக்கள் பெண்களின் நலன் கருதி கொல்லிமலையில் சந்துக்கடைகள் செயல்படுவதை முற்றிலும் வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளதாக கூறினர்...

மேலும் இனியும் அரசு நடவடிக்கை எடுக்காமல் தாமதித்தால் மலைவாழ் பெண்கள் தொடர் போராட்டம் மற்றும் உண்ணாவிரதங்களில் ஈடுபடு போவதாக எச்சரித்தனர்.