நாமக்கல் மதுவிலக்கு போலீசார் அதிரடி | ராசிபுரம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட பாண்டிச்சேரி மதுபான பாட்டில்கள் பறிமுதல்

ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணி

நாமக்கல் மதுவிலக்கு போலீசார் அதிரடி | ராசிபுரம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட பாண்டிச்சேரி மதுபான பாட்டில்கள் பறிமுதல்

நாமக்கல்.ராசிபுரம் அடுத்த ஆயில்பட்டியில் மதுவிலக்கு போலீசார் நடத்திய வாகன சோதனையில் காரில் பதுக்கி கொண்டு வந்த ரூ.90 ஆயிரம் மதிப்பிலான 180 பாண்டிச்சேரி மாநில மதுபான பாட்டில்கள், ஸ்விப்ட் காரை பறிமுதல் செய்து கொல்லிமலை பகுதியைச் சேர்ந்த இளங்கோவன், குணசேகரன் ஆகியோரை கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆயில்பட்டி பகுதியில் மதுவிலக்கு பிரிவு துணை ஆய்வாளர் மனோகரன் தலைமையிலான தனிப்படை வாகன சோதனையில் ஈடுபட்ட போது அதிவேகமாக வந்த ஷிப்ட் காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது இதில் 169 பாண்டிச்சேரி மாநில மது பாட்டில்களும் , 11 அதிக விஷத்தன்மை கொண்ட நெடியுடைய போலி மதுபானங்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டபோது நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சேர்ந்த சின்னசாமி மகன் இளங்கோவன்(33), கொல்லிமலை வளப்பூர் நாடு பகுதி செல்வராஜ் மகன் குணசேகரன்(27) ஆகியோர் கைது செய்யப்பட்டதுடன் 180 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு சொகுசு காரும் பறிமுதல்.