இராசிபுரம் நகராட்சியின் ஊழல் பட்டியல் தயார்... எச்சரித்த போராட்ட குழு | RASIPURAM | BUSSTAND | PROTEST
ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தை அணைப்பாளையம் பகுதிக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேஜ் அணிந்து மக்கள் நல குழு உடன் இணைந்து வணிகர்கள் கவன ஈர்ப்பு அறவழி போராட்டம்
இராசிபுரம்: நகராட்சியின் ஊழல் பட்டியல் எங்கள் கையில் ஆதாரமாக உள்ளது-பத்து ரூபாய் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்வினை விஸ்வராஜ் எச்சரிக்கை.
ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தை அணைப்பாளையம் பகுதிக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேஜ் அணிந்து மக்கள் நல குழு உடன் இணைந்து வணிகர்கள் கவன ஈர்ப்பு அறவழி போராட்டம்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தை சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அணைப்பாளையம் பகுதியில் மாற்றி அமைக்க இன்று கோரப்பட்டுள்ள இணையதள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், பல கட்ட போராட்டங்களுக்கு செவி சாய்க்காத ராசிபுரம் நகராட்சி கண்டித்து கருப்பு பேட்ச் அணிந்து அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வணிகர்களுக்கு ஆதரவாக பத்து ரூபாய் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்வினை விஸ்வராஜ் புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சியின் இணையதள ஒப்பந்தத்தை எதிர்த்து வணிகர் சங்கங்களுடன் அர வழி போராட்டத்தில் ஈடுபட்டார் . அவர் பேசுகையில்: ஒப்பந்தத்தை எடுத்து நீ (நிறுவனம்) எப்படி புதிய பஸ் நிலையத்தை கட்டுகிறாய் என நாங்கள் பார்க்கிறோம், மின்னணு ஒப்பந்தத்தை எடுக்கும் நிறுவனம் இனி தமிழகத்தில் எங்கு பணி செய்தாலும் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் முழு ஆதரங்களுடன் பத்து ரூபாய் இயக்கம் போராட்டத்தில் ஈடுபடும் என எச்சரித்தார் .
மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் புதிய பஸ் நிலையம் மாற்றத்தை தமிழக அரசும், ராசிபுரம் நகராட்சியும் உடனடியாக கைவிட வேண்டும் எனவும் , அடுத்த கட்ட போராட்டத்திற்கு எங்களை தள்ள வேண்டாம் எனவும் சட்ட ரீதியான போராட்டம் தொடரும் எனவும் பேசினார்.
இந்தப் போராட்டத்தில் வணிகர் சங்கங்கள் நிர்வாகிகள் உட்பட, அதிமுக, மதிமுக , பாமக, அமமுக, உட்பட ராசிபுரம் மக்கள் நல குழு நிர்வாகிகள் கலந்து கொண்டு ராசிபுரம் நகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக கருப்ப பேஜ் அணிந்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.