கோவில் முன் அடங்கிய உயிர் | தாய்மாமன் கட்டையால் அடித்து கொலை
பள்ளியில் வேறு மாணவனுடன் பேசிய அக்காமகள்..வீட்டில் சண்டைபோட்ட தாய்மாமன்..

தாய், தங்கை திட்டியதால் தாய் மாமனை கட்டையால் அடித்து கொலை
நல்லிபாளையம் போலீசார் விசாரணை. நாமக்கல் அடுத்த செல்லப்பம்பட்டி எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் கொண்டன் மகன் சக்திவேல் (27), கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார்.
நேற்று இரவு எம்.ஜி.ஆர் காலனியில் உள்ள மாரியம்மன் கோவில் முன்பு மதுபோதையில் சக்திவேல் படுத்து தூங்கியுள்ளார். அப்போது சக்திவேலுவின் சொந்த அக்காவான பாஞ்சாலியின் மகன் கேசவன் (17) மரக்கட்டை கொண்டு சக்திவேலுவின் தலையில் பயங்கரமாக தாக்கி உள்ளார் அருகே இருந்தவர்கள் கேசவனை பிடிக்க சென்ற போது அவர்களையும் அடித்துள்ளார்.
கேசவன் கட்டையால் சக்திவேலை அடித்ததில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக சம்பவ இடத்திலே சக்திவேல் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, சம்பவ இடத்திற்கு வந்த நல்லிபாளையம் போலீசார் சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சக்திவேலை கொலை செய்த கேசவனை போலீசார் கைது செய்தனர், பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.