ராசிபுரம் அருகே கனரக லாரியின் முன் தவறி விழுந்து லாரி ஏறியதில் உடல் நசங்கி ஒருவர் பலி... பதபதைக்கும் CCTV காட்சிகள்
accident_dead
ராசிபுரம் அருகே கனரக லாரியின் முன் தவறி விழுந்து லாரி ஏறியதில் உடல் நசங்கி ஒருவர் பலி...
பதபதைக்கும் CCTV காட்சிகள் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையம் பகுதியில் ராசிபுரம் To திருச்செங்கோடு சாலையில் பிள்ளாநல்லூர் கனரா வங்கி அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த அணைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ்(40) என்பவர் லாரியை இடதுபுறம் முந்தி சென்ற நிலையில் நிலை தடுமாறி லாரியின் முன் விழுந்ததில் பின்னால் வந்த கனரக வாகனம் அவர் மீது ஏறி சற்று தூரம் இழுத்துச் சென்ற உடல் நசங்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்...
புதுச்சத்திரம் போலீசார் சடலத்தை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.... லாரியின் முன் விழுந்து லாரி இருசக்கர வாகனத்தின் மீது ஏறி செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது...