E-Filing பயிற்சி வகுப்பு
வழக்கின் தீர்ப்பில் கால தாமதம் ஏற்படாத வண்ணம் நீதிமன்ற அலுவலர்களால் E-Filing பயிற்சி வகுப்பு

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சு.ராஜேஸ் கண்ணன், இ.கா.ப., அவர்கள் தலைமையில் மின்னணு கோப்பு முறையில் (E-Filing) குற்றப்பத்திரிக்கை அல்லது இறுதி அறிக்கையை தாக்கல் செய்வது தொடர்பாக பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை மீது விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை அல்லது இறுதி அறிக்கையை இதுநாள் வரை சம்மந்தப்பட்ட நீதிமன்றங்களில் நேரடியாக தாக்கல் செய்யப்பட்டது. இதனால் சில கால தாமதம் ஏற்பட்டதால் இனிவரும் காலங்களில் வழக்கு விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை அல்லது இறுதி அறிக்கையை மின்னணு கோப்பு முறையில் (E-Filing) தாக்கல் செய்வது மூலம் வழக்கின் தீர்ப்பில் கால தாமதம் ஏற்படாத வண்ணம் நீதிமன்ற அலுவலர்களால் E-Filing பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
மேற்படி வகுப்பில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர்கள், அனைத்து காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள், கணிணி பதிவாளர்கள் மற்றும் காவல் நிலைய வரவேற்பாளர்கள் உட்பட 120 பேர் கலந்து கொண்டனர்.