திராவிட மாடல்?பிஜேபி மாடல்?-ஈரோடு இறைவன்..கலகலப்பு பேச்சு

ராசிபுரத்தில் திமுக தலைவர் பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம்

இராசிபுரம்:திமுக தலைவர் பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம்.

சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட ஈரோடு இறைவன்-கலகலப்பு பேச்சு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே, ராசிபுரம் நகர திமுக., சார்பில், திமுக., தலைவர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ராசிபுரம் நகர திமுக செயலாளர் என் ஆர் சங்கர் தலைமை வகித்தார். இதில், ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வனத்துறை அமைச்சருமான மா.மதிவேந்தன் கலந்து கொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்தும், ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களான ராசிபுரம் நகர் பகுதியில் சாலை வசதி, தினசரி சந்தை அமைத்தல், பட்டாவழங்கல், போதமலை, கெடமலைக்கு சாலை வசதி அமைத்துக் கொடுத்தல் உள்ளிட்டவை குறித்து விளக்கி பேசினார்.

திமுக., சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட ஈரோடு இறைவன் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா குறித்தும், நிதி நிலை அறிக்கை குறித்தும் பேசினார். இந்த பொதுக்கூட்டத்தில், 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.