விழும் நிலையில் அரசு மருத்துவமனை...நோயாளிகள் அச்சம்
கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடிக்கும் இந்த அவல நிலையை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மருத்துவமனையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை
இராசிபுரம்:விழும் நிலையில் அரசு மருத்துவமனை...நோயாளிகள் அச்சம்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வடுகம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மேற்பூச்சு எப்போது வேண்டுமானாலும் பெயர்ந்து விழக்கூடிய சூழ்நிலையில் உள்ளதால் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடிக்கும் இந்த அவல நிலையை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மருத்துவமனையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை.