நாமக்கல்லில் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு | NAMAKKAL CM SPEECH

சட்டமன்ற தேர்தலை விட நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு திமுகவின் செல்வாக்கு உயர்ந்து இருக்கிறது

சட்டமன்ற தேர்தலை விட நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு திமுகவின் செல்வாக்கு உயர்ந்து இருக்கிறது. இதைப்பொறுத்து கொள்ள முடியாத EPS திமுக மதிப்பு சரிந்து விட்டது என்கிறார்.

திமுகவின் மதிப்பு சரிந்து விட்டது என EPS சொல்லி வருவதை மக்கள் காமெடியாக பார்க்கின்றனர். நாமக்கல்லில் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

நாமக்கல் அடுத்த பொம்மைகுட்டைமேட்டில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.810.28 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளாக புதிய பேருந்து நிலையம், சட்டக்கல்லூரி உட்பட பல்வேறு திட்டப்பணிகளையும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதோடு 16031 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

முன்னதாக முதலமைச்சருக்கு வெள்ளி வாள் வழங்கப்பட்டன. இந்த அரசு விழாவில் அரசு முதன்மைச் செயலாளர் முருகானந்தம், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வா.வேலு, ராஜேந்திரன், மதிவேந்தன், எம்.பிக்கள் ராஜேஷ்குமார், மாதேஷ்வரன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டனர்.#namakkal #breakingnews #dmk #dmknews #mkstalin #udhayanidhistalin