தலைமுறை தலைமுறையாக தொடரும் பாரம்பரிய மாடு தாண்டும் விழா
ராசிபுரம் பெருமாள் கோவிலில் பக்தர்களை மாடு தாண்டி சென்ற வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
இராசிபுரம்: தலைமுறை தலைமுறையாக தொடரும் பாரம்பரிய மாடு தாண்டும் விழா...
பெருமாள் கோவிலில் பக்தர்களை மாடு தாண்டும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
ராசிபுரம் பெருமாள் கோவிலில் பக்தர்களை மாடு தாண்டி சென்ற வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீபொன் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.
இங்கு ஆண்டு தோறும் புரட்டாசி மாத சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெறும் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை மாடு தாண்டும் வழிபாடு நடக்கும் அதன்படி புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை என்பதால் எடப்பாடி, கொங்கணாபுரம், சின்ன திருப்பதி, கச்சிப்பள்ளி, பள்ளிப்பட்டி, மூங்கில்காடு உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெருமாளை குலதெய்வமாக கொண்ட 300.க்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு வந்தனர். ராசிபுரம் நகர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து சக்தி அழைத்து மேள தாளங்கள் உடன் காளை மாட்டுடன் ராசிபுரம் முக்கிய பகுதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர்.
தொடர்ந்து ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாள் சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் வெள்ளி காப்பு சாத்தப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாள் கருடாழ்வார் ஆகியோர் ராசிபுரம் முக்கிய வீதி வழியாக திருத்தேர் பவனி ஊர்வலம் நடைபெற்றது. அங்கு முக்கிய நிகழ்வாக பக்தர்கள் மீது மாடுதான்டும் வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.
கோவிலுக்கு மாடு அழைத்து வரும் வழியில் ஆண், பெண், குழந்தைகள், பெரியவர்கள், பக்தர்கள் அனைவரும் தரையில் படுத்து கொண்டனர். படுத்திருந்த பக்தர்களை மாடி தாண்டி செல்லும்போது அதன் கால் பக்தர்கள் மேல் படாமல் சென்றால் வாக்குப் பலிக்கும், கால் பட்டு விட்டாலோ அல்லது தாண்டாமல் சென்றுவிட்டாலோ பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறாது என்பது ஐதீகமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி நூற்றுக்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் படுத்து இருந்து அவர்களை மாடு தாண்டி செல்லும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம், லட்டு பிரசாதமும் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாட்டினை சென்னை தொழிலதிபர் தனபால, மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத பொன் வரதராஜ பெருமாள் கோவில், ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம், நித்திய சுமங்கலி ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் பிரசாத குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.