பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியீடு
பொறியியல் படிப்பிற்கான மாணவர்களின் தரவரிசை பட்டியலில் மூன்றாம் இடத்தை நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குருசாமிபாளையம் ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த மாணவன் S.கோகுல் பெற்றார்.

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியீடு!
3 -ம் இடத்தை பிடித்த ராசிபுரம் மாணவன் கோகுல்!
பொறியியல் படிப்பிற்கான மாணவர்களின் தரவரிசை பட்டியலில் மூன்றாம் இடத்தை நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குருசாமிபாளையம் ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த மாணவன் S.கோகுல் பெற்றார்.
இவர் தொட்டியபட்டி எனும் கிராமத்தை சேர்ந்தவர். இவருடைய பெற்றோர்கள் செல்வராசு,அன்னபூரணி விவசாயம் வேலை செய்து வரும் நிலையில் மாணவர் கோகுல் மூன்றாம் இடம் பிடித்தது சாதித்துள்ளார்.
மாணவன் பேட்டி: என்னுடைய இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என் பெற்றோர்களும், பள்ளி ஆசிரியர்களும் என்னை ஊக்குவித்தது தான் என பெருமையுடன் பேசிய மாணவன், சக நண்பர்களும் தன் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றார். மேலும் தான் ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளராக ஆக வேண்டும் என்பதே நோக்கம் என்றார்.