50 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது

வக்கில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இனோவா கார், பல்சர் பைக் பறிமுதல்

50 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது

ராசிபுரம் அருகே ஆண்டகளூர்கேட் பகுதியில், 50 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது;

ஒருவர் தலைமறைவு. வக்கில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இனோவா கார், பல்சர் பைக் பறிமுதல்...

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டகலூர்கேட் பகுதியில் ராசிபுரம் காவல் உதவி ஆய்வாளர்கள் தங்கம், சிவா தலைமையிலான போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஆண்டகளூர்கேட் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள மதில் சுவருக்கு அருகே, சக்திவேல் கோழிப்பண்ணைக்கு செல்லும் வழியில் TN 40 X 6006 பதிவு எண் கொண்ட வெள்ளை நிற இனோவா காரும், TN 28 CY 1933 என்ற பதிவு எண் கொண்ட பைல்சர் இருசக்கர வாகனமும் நின்று கொண்டிருந்தது. அதன் அருகே இருந்த நான்கு பேர் போலீசாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.

அவர்களை துரத்தி பிடித்து, வாகனத்தை சோதனை செய்ததில், 50 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில் ஓசூரில் இருந்து கொண்டுவரப்பட்டதும், இதன் மதிப்பு ரூ.10 லட்சம் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, சேலம் மாவட்டம் கருப்பூர் புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவரும் தற்போது, கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் விருப்பாச்சி நகரில் வசித்து வரும் சதீஸ் (எ) கந்தசாமி (30), இதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் (46) நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கட்டணாச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த தினேஷ்(25), இதே பகுதியைச் சேர்ந்த கார்த்தி(26) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். ராசிபுரம் அருகே 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.