ராசிபுரத்தில் சீமான் பேட்டி | NTK | SEEMAN | RASIPURAM

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை செங்கலை உதயநிதி ஸ்டாலின் தூங்கிக் கொண்டு சென்றது போல் ராசிபுரம் புதிய பஸ் நிலையத்துக்கு நீங்கள் செங்கலை நட்டால் நான் தூக்கிக் கொண்டு செல்வேன்

ராசிபுரத்தில் சீமான் பேட்டி: நாமக்கல்:ராசிபுரம் அடுத்த அணைப்பாளையம் பகுதியில் புதிதாக அமைய உள்ள ராசிபுரம் புறநகர் பேருந்து நிலைய இடத்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் பார்வையிட்டார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அணைப்பாளையம் ஊராட்சி பகுதியில் சுமார் 7.8 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான தீர்மானமானது கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராசிபுரம் நகராட்சியில் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்து ராசிபுரம் புதிய பஸ் நிலையம் மீட்பு கூட்டமைப்பு மற்றும் ராசிபுரம் மக்கள் நலக்குழு , வணிகர் சங்கங்கள், இந்த தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தியது.

இந்நிலையில் 21 ஆம் தேதி புதிய பஸ் நிலையம் கட்டுமான பணிகளுக்கான மின்னணு ஒப்பந்தம் நடைபெறுகிறது. எனவே ராசிபுரம் மக்களின் வாழ்வாதாரம் கருதி மின்னணு ஒப்பந்தத்தை ரத்து செய்து, ராசிபுரம் புதிய பஸ் நிலையம் வழக்கம் போல் செயல்பட வேண்டுமென்றும், புதிய பஸ் நிலையம் மாற்றத்தால் ராசிபுரம் வணிகர்கள் மிகப்பெரிய பாதிப்படைவார்கள் என்றும், புதிய பஸ் நிலையம் அமைக்கும் தீர்மானத்தை நகராட்சி ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 21ஆம் தேதி வணிகர் சங்க கூட்டமைப்புகள் கருப்பு பேட்ச் அணியும் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

 இதைத்தொடர்ந்து நாமக்கல் அரசு மருத்துவமனை நாமக்கல் நகர் பகுதி உள்ளே செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்த்தில் கலந்து கொள்வதற்காக நாமக்கல் வருகை புரிந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அமைய கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் அப்பகுதியை பார்வையிட்டார்.

ராசிபுரத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் புதிய பஸ் நிலையம் அமைவதால் ராசிபுரம் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்பது வணிகர் சங்கங்களின் குற்றச்சாட்டு வைத்துள்ள நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் அரசு திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் , புதிய பஸ் நிலையம் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனை மாற்றம் என்பது மக்களுக்கு எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் செயல்படுத்த வேண்டும் என பேட்டியளித்தார் .