இதுக்கு கூடவ லஞ்சம்! ஊராட்சி செயலரை சிக்க வைத்த பெண் !

ராசிபுரம் அருகே ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் தங்கதுரை கைது | நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சுபாஷினி நடவடிக்கை.

இதுக்கு கூடவ லஞ்சம்! ஊராட்சி செயலரை சிக்க வைத்த பெண் !

இராசிபுரம்:100 நாள் வேலை திட்ட அட்டை வழங்க பெண்ணிடம் 1000 ரூபாய் லஞ்சம் வாங்கிய குட்டலாடம்பட்டி ஊராட்சி செயலர் தங்கதுரை நாமக்கல் ஊழல் மற்றும் கண்காணிப்பு துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து கைது.

இதுபோல் புகார்களை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கண்காணிப்பாளர் சுபாஷினி அவர்களுக்கு இந்த செல் எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டுகோள் : 9445048878

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குட்டலாடம்பட்டி ஊராட்சியில் மூதாட்டி சந்தோஷம்(38)என்பவரிடம் 100 நாள் அட்டை வழங்க ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற செயலர் தங்கதுரையை(46) நாமக்கல் ஊழல் மற்றும் கண்காணிப்பு பிரிவு ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழு கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை .

குட்டலாடம்பட்டி ஊராட்சியில் 524 பேர் 100 நாள் வேலைத்திட்ட அட்டைப் பணியாளர்களாக உள்ள நிலையில் வாரத்திற்கு ஆயிரம் லஞ்சம் தருபவர்களுக்கு மட்டுமே 100 நாள் வேலை வழங்கி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் குட்டலாடம்பட்டி ஊராட்சி மன்ற செயலர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது போல் புகார்களை நாமக்கல் ஊழல் மற்றும் கண்காணிப்பு பிரிவு கண்காணிப்பாளர் சுபாஷனி அவர்களின் தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டார் . (9445048878)