"காப்பாத்துங்க காப்பாத்துங்க" 7 மணி நேரமாக 80 அடி கிணற்றில் கதறிய 78 வயது மூதாட்டி | உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்

ராசிபுரம் அருகே 7 மணி நேரமாக கிணற்றில் தவித்த 78 வயது மூதாட்டி ராசம்மாள் உயிருடன் மீட்ட ராசிபுரம் தீயணைப்புத் துறையினர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குட்டலாடம்பட்டி பகுதியில் வசித்து வரும் ராஜம்மாள் (78) என்ற மூதாட்டி பார்வை கோளாறு காரணமாக அருகே இருந்த 80 அடி கிணற்றில் காலை 9 மணிக்கு கால் இடரி தவறி விழுந்துள்ளார் .
இந்நிலையில் கிணற்றில் தண்ணீர் குறைவாக இருந்ததால் உள்ளே மூழ்கி அருகில் குச்சியைப் பிடித்து தண்ணீரின் மேலே வந்து கூச்சலிட்டுள்ளார் . கால்கள் சகதியில் சிக்கிக் கொண்டதால் அவரால் நகர முடியவில்லை .
வயது மூப்பு காரணமாக கிணற்றிலிருந்து மூதாட்டி சத்தம் போட்டது யாருக்கும் கேட்காத நிலையில் மதியம் 3 மணி வரை "காப்பாத்துங்க காப்பாத்துங்க" என கத்திக் கொண்டே இருந்துள்ளார்..
சுமார் 7 மணி நேரமாக தண்ணீரிலேயே இருந்ததால் கை கால்கள் விரைக்க ஆரம்பித்த நிலையில் அவ்வழியாக வந்த சிலர் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்துள்ளனர் .
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூதாட்டியை பார்த்து அதிர்ந்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர் . சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராசிபுரத்தில் தீயணைப்பு துறையினர் மூதாட்டியே பத்திரமாக மீட்டனர் .
60 கிணற்றில் தலை கீழாக விழுந்து 7 மணி நேரமாக போராடிய ராஜம்மாளுக்கு ஆயுசு கெட்டி என பகுதி மக்கள் கூறி உணவு வழங்கி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர் .