இராசிபுரத்தில் கஞ்சாவுடன் சுற்றிய நான்கு இளைஞர்கள் கைது!மதுவிலக்கு அமல் பிரிவு தீவிர தேடுதல் வேட்டை!
விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த நான்கு இளைஞர்கள் கைது : 1,120 கிலோ கஞ்சா பறிமுதல்.
நாமக்கல் மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு கல்லூரி, தனியார் கல்லூரி, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணனுக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் உதவியாளர் மனோகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது .
இந்நிலையில் ராசிபுரம் எல்லைக்குட்பட்ட ராசி நகர் பகுதியில் இரவு சோதனை போது 1,120 கிலோ எடையுள்ள கஞ்சா வைத்திருந்த ராசிபுரம் காதர் தெருவை சேர்ந்த ரியாஷ்தீன் (23), களப்பநாய்க்கன்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்த கோகுல்ராஜ் (24), குச்சிக்காடு அம்பேத் நகர் தெருவை சேர்ந்த கௌதம் (24), புதுப்பாளையம் இந்திரா காலனியைச் சேர்ந்த கெளதம் (19) ஆகியோரை கைது செய்து காவல்துறையினர் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.