கல்லூரி மாணவி கொடுத்த பர்த்டே பார்ட்டியில் விஷமான சவர்மா...கடைக்கு சீல்?
நாமக்கல்:மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 11 பேருக்கு வாந்தி, மயக்கம் சவர்மா சாப்பிட்ட 11 கல்லூரி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்:மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...
நாமக்கல்:மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 11 பேருக்கு வாந்தி, மயக்கம் சவர்மா சாப்பிட்ட 11 கல்லூரி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்:மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.
நாமக்கல்: கெட்டுப்போன இறைச்சி உணவை சாப்பிட்ட, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவருக்கு சனிக்கிழமை பிறந்த நாளாகும். இதனையொட்டி அவருடைய நண்பர்கள் 10 பேர் நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள தனியார் அசைவ உணவகத்தில் சனிக்கிழமை மாலை சவர்மா என்ற உணவினை சாப்பிட்டு உள்ளனர்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென 11 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து விடுதி ஊழியர்கள் அவர்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சாந்தா அருள்மொழி கூறியதாவது: மாணவி ஒருவர் பிறந்த நாளை ஒட்டி 11 பேர் தனியார் உணவகத்தில் சவர்மா சாப்பிட்டு உள்ளனர். அது அவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி உடல்நல குறைவு ஏற்பட்டது.
அனைவரும் நலமுடன் உள்ளனர். 11 மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச. உமா, அவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் மாணவ மாணவிகளை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவரது உடல் நிலையை கேட்டறிந்து மருத்துவர் இடத்தில் தொடர்ந்து உரிய சிகிச்சை அளிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து மாணவ மாணவிகள் உணவு சாப்பிட்ட அந்த கடைக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அந்த கடைக்கு சீல் வைக்குமாறு உத்தரவிட்டார்.