வி.ஏ.ஒ வை தாக்கிய நபரை கைது செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா | NAMAKKAL
காவல்துறையினருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம் | NAMAKKAL
வி.ஏ.ஒ வை தாக்கிய நபரை கைது செய்யக்கோரி வி.ஏ.ஒ வினர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம்.
நாமக்கல் மாவட்டம் நருவலூர் அக்ரஹாரத்திற்கு உட்பட்ட பெரிய கவுண்டம்பாளையத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள மரத்தை அதேப் பகுதியை சேர்ந்த திருமுருகன் என்பவர் கடந்த 4 ம் தேதி வெட்டியதை தட்டி கேட்ட கிராம நிர்வாக அலுவலர் ராமன் என்பவரை திருமுருகன் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் திருமுருகன் தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில் கடந்த 9 நாட்கள் ஆகியும் திருமுகனை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் ராமனை தாக்கிய நபரை கைது செய்யக்கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகம் முன்பு 350 க்கும் மேற்பட்ட கிராம நிருவாக அலுவலர்கள், வருவாய் துறையினர் தரையில் அமர்ந்து காவல்துறையினருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு வி.ஏ.ஓவினர், வருவாய்த் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக உள்ளது.