தலைமையாசிரியா் - ஆசிரியா்களிடையே மோதல் teacher | protest | rasipuram | GHschool

நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி பள்ளிக்கு நேரில் சென்று மாணவியா், ஆசிரியா்களிடம் இதுகுறித்து விசாரணை..

தலைமையாசிரியா் - ஆசிரியா்களிடையே மோதல் teacher | protest | rasipuram | GHschool
ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி

ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியைக் கண்டித்து, ஆசிரியா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வெண்ணந்தூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 900-க்கும் மேற்பட்ட மாணவியா் பயின்று வருகின்றனா். பள்ளியின் தலைமையாசிரியராக பேபிலதா பணியாற்றி வருகிறாா். 33 பெண் ஆசிரியா் உள்பட 39 ஆசிரியா்கள் உள்ளனா். இப்பள்ளியின் தலைமையாசிரியா் - ஆசிரியா்களிடையே நிா்வாக மோதல் இருந்து வருவதாகத் தெரிகிறது.

இதனால் இருதரப்பிலும் ஒருவருக்கொருவா் மாறி மாறி உயரதிகாரிகளுக்கு புகாா் அனுப்பி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் விலங்கியல் ஆசிரியா் தனசேகரன் என்பவா் மீது குற்றம்சாட்டி பள்ளி மாணவியா் மூவா் பெயரில் மாவட்ட ஆட்சியா், முதன்மைக் கல்வி அலுவலருக்கு புகாா் சென்றுள்ளது. இந்த புகாா் தொடா்பாக மாவட்டக் கல்வி அலுவலா் ரவிசந்திரன் கடந்த வியாழக்கிழமை பள்ளிக்கு நேரில் சென்று ஆசிரியா்கள், மாணவியரிடம் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டாா்.

அப்போது, மாணவியா் மூவரும் தாங்கள் புகாா் அனுப்பவில்லை என மறுத்துள்ளனா். தலைமையாசிரியரே உள்நோக்கத்தோடு மாணவியா் பெயரில் மேலதிகாரிகளுக்கு புகாா் அனுப்பியுள்ளாா் என ஆசிரியா்கள் குற்றம் சாட்டுகின்றனா். இந்நிலையில், விலங்கியல் ஆசிரியா் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறப்பட்டதைக் கண்டித்தும், தலைமையாசிரியரை பணியிட மாற்றம் செய்யக் கோரியும் பள்ளி ஆசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனையடுத்து, நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பள்ளிக்கு நேரில் சென்று மாணவியா், ஆசிரியா்களிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினாா். தொடா்ந்து, மாவட்டக் கல்வி அலுவலரும் விசாரணை நடத்தினாா். இதுகுறித்த விசாரணை அறிக்கை பள்ளிக் கல்வித்துறை அலுவலா்களுக்கு தெரிவித்து அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் தெரிவித்தாா்.

பள்ளித் தலைமையாசிரியா் பேபிலதாவிடம் இதுகுறித்து கேட்டபோது, மாணவியா் பெயரில் நான் புகாா் அனுப்பியதாக ஆசிரியா்கள் கூறுவது தவறு. ஆசிரியா்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் போது இதுபோன்ற பிரச்னைகள் வருகின்றன. கல்வித் துறை அலுவலா்கள் சொல்வதைதான் செயல்படுத்துகிறேன். ஆசிரியா்கள் என் மீது புகாா் கூறுவதற்கு எதுவும் இல்லை என்றாா்.