வாழ்வில் ஏற்ப்படும் பிரச்சனைகள் தீர பைரவர் வழிபாடு | தேய்பிறை அஷ்டமி
தேய்பிறை அஷ்டமி தினம் முன்னிட்டு ஶ்ரீ நவ கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் | வாழ்வில் ஏற்ப்படும் பிரச்சனைகள் தீர பைரவர் வழிபாடு....
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த பட்டணம் பொன்மலையில் ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பக்தர்கள் ஶ்ரீ நவகால பைரவரை வழிபாடு செய்தனர்..
தேய்பிறை அஷ்டமி தினம் முன்னிட்டு ஶ்ரீ நவ கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் நள்ளிரவு தீபாராதனை வெகு விமர்சையாக நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பகுதியில் அமைந்திருக்கும் பொன்மலை திருத்தலம் அருள்மிகு ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஶ்ரீ பொன்னேஸ்வர் ஆலயத்தில் ஶ்ரீ நவ காலபைரவர்க்கு தேய்பிறை அஷ்டமியை விழா நடைபெற்றது... இத்தலத்தில், ஶ்ரீ நவ காலபைரவருக்கு தனி சன்னதி உள்ளது. நவ கால பைரவருக்கு பால் ,பன்னீர், தேன் ,இளநீர், திருமஞ்சன பொடி, மாவு பொடி,சந்தனம்,கரும்பு சாறு, உள்ளிட்ட 18 வகையான பல விதமான திறவியங்களால் அபிஷேகங்கள் தொடர்ந்து நடைபெற்றது... திரளான பக்தர்கள் எலும்பிச்சை மற்றும், பூசணி விளக்கேற்றி வழிபாடு செய்தனர் பின்னர், அபிஷேகம் முடிந்த பின் ஸ்ரீ காலபைரவருக்கு மலர்கள், வடை மாலை, எலும்பிச்சை மாலை,மற்றும் வெள்ளி கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாதரனை காண்பிக்கபட்டது... இவ்விழாவில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வழிப்பாடு செய்து சுவாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் செய்த பின் விழா குழுவினர் சார்பாக கோவிலுக்கு வந்து இருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ராசிபுரம் மற்றும் சீராப்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஶ்ரீ நவ கால பைரவரை வழிபாடு செய்து சுவாமி அருள் பெற்று சென்றனர்