தொடரும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை | மாவட்ட ஆட்சியர் உமா
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தமிழ்நாடு கைம் பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு
பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் தொடர்ந்து வருகிறது - நாமக்கல்லில் அரசு நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் உமா
நாமக்கல்லில் தனியார் ஓட்டலில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தமிழ்நாடு கைம் பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் உமா கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசுகையில்... படிச்சவங்களுக்கும், படிக்காதவங்களுக்கும் குடும்ப வன்முறை என்பது தொடர்ந்து வருகிறது மேலும் வேலைக்கு போகிறவர்கள், வீட்டில் இருப்பவர்களுக்கு அந்த மாதிரி குடும்ப வன்முறையில் இருந்து காப்பாற்றுவதற்கு சமூக நல பாதுகாப்புத்துறை உள்ளது.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக என்னென்ன கொடுமைகள் நடந்தாலும் 181 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல்களை சொன்னால், சொல்லக்கூடிய தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும், எந்த விதமான பாதிப்பு இருந்தாலும் தேவையான மனநல ஆலோசனைகள், சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும் என ஆட்சியர் பேசினார். இந்த கருத்தரங்கத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.