திருமணிமுத்தாறு தரைப்பாலத்தில் அடித்து செல்லப்பட்டு விவசாயி உயிரிழப்பு | TIRUCHENGODE

பால் கொண்டு செல்வதற்கு வந்தபோது திருமணி முத்தாற்றின் குறுக்கே உள்ள சிறு பாலத்தில் கீழே விழுந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்

திருமணிமுத்தாறு  தரைப்பாலத்தில்  அடித்து செல்லப்பட்டு விவசாயி  உயிரிழப்பு | TIRUCHENGODE
திருமணிமுத்தாறு தரைப்பாலத்தில் அடித்து செல்லப்பட்டு விவசாயி

திருமணிமுத்தாற்றில் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விவசாயி பெரியசாமி உயிரிழப்பு

திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் கொன்னையார் அருகே திருமணிமுத்தாறு வாய்க்கால் உள்ளது. கடந்த சில நாட்களாகவே கடும் மழை பெய்து கொண்டிருப்பதால் திருமணி முத்தாற்றில் தொடர்ந்து மழைநீர் வந்து கொண்டுள்ளது கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வரும் நிலையில் கொன்னையார் அரசடி காட்டில் வசித்து வரும் பெரியசாமி (58) ஆட்டு வியாபாரி மற்றும் விவசாயம் தொழில் செய்து வருகிறார்.

இவரது காட்டில் இருந்து கொன்னையாறு பகுதிக்கு இன்று அதிகாலை 5 மணி அளவில் அவரது வீட்டில் இருந்து பால் கொண்டு செல்வதற்கு வரும்போது திருமணி முத்தாற்றின் குறுக்கே உள்ள சிறு பாலத்தில் கீழே விழுந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டு விட்டார்.

இந்நிலையில் திருச்செங்கோடு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு பெரியசாமி பிரேதத்தை கண்டுபிடித்து ஆற்று நீரில் இருந்து மீட்க மீட்கப்பட்ட போது அவரது கையில் பால் கேன் உடன் இருந்துள்ளார்.

அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனை கொண்டு செல்வதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது .

எலச்சிபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்