பொங்கல் பண்டிகை தினத்தன்று அனைத்து வீடுகளிலும் காவிரி குடிநீர்- MP கே.ஆர்.என் இராஜேஷ்குமார் உறுதி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றிய செயல்வீரர் கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினரும் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான கே ஆர் என்.இராஜேஷ்குமார் பேச்சு

854 கோடியில் ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது வருகிற பொங்கல் பண்டிகை தினத்தன்று அனைத்து வீடுகளிலும் காவிரி குடிநீர் வழங்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என் இராஜேஷ்குமார் உறுதி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றிய செயல்வீரர் கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினரும் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான கே ஆர் என்.இராஜேஷ்குமார் பேச்சு
கொடைநாடு கொள்ளையும் கொலைகளையும் நாம் மறக்க முடியுமா தூத்துக்குடி துப்பாக்கி சூடு எடப்பாடி ஆட்சியில் சிகப்பு கறை கொடைநாடு கொள்ளையும் கொலைகளையும் நாம் மறக்க முடியுமா? தூத்துக்குடி துப்பாக்கி சூடு எடப்பாடி ஆட்சியில் சிகப்பு கறை.பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பெண்களுக்கு அளிக்கப்பட்ட அநீதி என காட்டம்... திமுக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளில் இத்தனை திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்துள்ளோம் 10 ஆண்டுகளில் அதிமுக என்ன செய்தது என நீங்களே சொல்லுங்கள்…ஓடாத மின்விசிறி அரைக்காத மிக்ஸி ஆட்டாத கிரைண்டர் இதை கொடுத்தது தான் அவர்கள் சாதனை ...எல்லாம் பேரிச்சம் பழ கடைக்கு போய்விட்டது. ஆனால் கலைஞர் ஆட்சியில் கொடுக்கப்பட்ட கலர் டிவி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இன்று வரை ஓடிக்கொண்டிருக்கிறது இதுதான் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் உள்ள தரம் வித்தியாசம். கொடநாடு கொலை வழக்கு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் ஆகியவை தான் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் ஆகும். கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க. பெட்ரோல், டீசல் விலை மற்றும் சமையல் கியா சிலிண்டர் விலையை உயர்த்தியதை தவிர வேறொன்றும் செய்யவில்லை. திமுக அரசு மகளிர் உரிமைத்தொகை இலவச பேருந்து முதியோர் உதவித்தொகை அது மட்டுமல்லாமல் 854 கோடியில் ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது வருகிற பொங்கல் பண்டிகை தினத்தன்று அனைத்து வீடுகளிலும் காவிரி குடிநீர் வழங்கப்படும் எனவே மக்களுக்கான முதல்-அமைச்சராக உள்ள மு.க. ஸ்டாலினின் கரங்களை வலுப்படுத்த நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.என்றார்.