நாமக்கல்:தொடர் கொள்ளைகள் | அச்சத்தில் மக்கள் |ஒரே இரவில் 6 கடைகள் 4 கோவில்கள் என கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல் பல லட்சம் சுருட்டிக் கொண்டு தப்பி ஓடிய பின்னணி ?

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் கொடூர கொலைகள் நடந்து வரக்கூடிய சூழ்நிலையில் எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி வரும் நிலையில் கடந்த சில தினங்களாக நாமக்கல் மாவட்டத்தில் தொடர் திருட்டுகளால் பொதுமக்கள் அச்சச்தில் நிலைகுலைந்து உள்ளனர்.

நாமக்கல்:தொடர் கொள்ளைகள்:அச்சத்தில் மக்கள்:

இராசிபுரம் அருகே ஒரே இரவில் 6 கடைகள் 4 கோவில்கள் என கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல் பல லட்சம் சுருட்டிக் கொண்டு தப்பி ஓடிய பின்னணி ?

நாமக்கல் மாவட்டத்தில் கடந்து சில தினங்களாகவே. பல்வேறு பகுதிகளில் பல லட்சம் மதிப்பினால் தங்க நகைகள், ரொக்க பணம் இருசக்கர வாகனங்கள் என தொடர் திருட்டுக்கள் நடைபெற்று வருவதால் நாமக்கல் மாவட்ட மக்கள் அச்சத்தில் நிலை குலைந்து உள்ளனர்.

காவல்துறையின் மெத்தன போக்கே தொடர் திருட்டுகளுக்கு காரணமான எனவும், இரவு நேர ரோந்து பணிகளில் காவல்துறை கண்துடைப்புக்காக செயல்படுவதும் தான் காரணம் என குற்றச்சாட்டு .

சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களையும் காவலர்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ?

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் கொடூர கொலைகள் நடந்து வரக்கூடிய சூழ்நிலையில் எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி வரும் நிலையில் கடந்த சில தினங்களாக நாமக்கல் மாவட்டத்தில் தொடர் திருட்டுகளால் பொதுமக்கள் அச்சச்தில் நிலைகுலைந்து உள்ளனர்.

இரவு நேர ரோந்துப் பணிகளில் சுணக்கம் காட்டும் நாமக்கல் காவல்துறையால் கொள்ளை சம்பங்கள் தொடர்வதாகவும்,முறையாக CCTV கேமராவை பராமரிக்காமல் மெத்தனமாக செயல்படும் அதிகாரிகளால் பல மாதங்களாகியும், குற்றவாளிகள் அடையாளம் கண்பதில் சுணக்கம் என கூறப்படுகிறது.

தொடர் திருட்டுகள்:

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த அணைப்பாளையம் புறவழிச்சாலையில் உள்ள 6 கடைகளின் பூட்டை உடைத்து 75000 ரொக்க பணம் மற்றும் நகைகள் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தொடர் விசாரணையில் அதே பகுதியை சுற்றியுள்ள சந்திரசேகரபுரம், சேந்தமங்கலம் பிரிவு ரோடு, ஒனங்கரடு பகுதியில் உள்ள முருகன் கோவில், விநாயகர்கோவில், மாரியம்மன் கோவில், என 5 கோவில்களில் உண்டியல் பணம், தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

2 பேர் கொண்ட மர்ம நபர்கள் இருசக்கரத்தில் வந்து திருட்டு சம்பவத்தில் CCTV காட்சிகள் மூலம் தெரியவந்துள்ள நிலையில் இராசிபுரம் காவல்துறையினர் , போப்பநாய், கைரேகை நிபுணர்கள் மூலம், தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டுகளும்,கொள்ளை சம்பவங்களும், கூலிப்படை மோதல்களும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

குறிப்பாக, நாமக்கல், இராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், மோகனூர், கொல்லிமலை பகுதிகளில் தொடர் வாகன திருட்டுகளால் காவல்துறையினர் நிலைகுலைந்து போனனர்.

தொடர்ந்து கடந்த மாதம் இராசிபுரம் மேட்டுத்தெருவில் சுமார் 50 முதல் 75 பவுன் நகைகள், இருசக்கர வாகனங்கள் கொள்ளையடித்த கும்பலை 1 மாதம் ஆகியும் இதுவரை காவல்துறையால் அடையாளம் காணப்படாது மிகப்பெரிய பின்னடைவாகவே உள்ளது.

தொடர்ந்து லாரிகளில் 100க்கும் மேற்பட்ட பேட்டரிகள் திருடப்பட்டது, ராசிபுரம் ஒரு வழி சாலையில் அஞ்சல் பெண் ஊழியரிடம் முகமூடி அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள், தங்க சங்கிலிபை பறித்து சென்றது, எடப்பாடி பழனிசாமி உதவியாளர் வீட்டில் பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும், பேளுகுறிச்சி பகுதியில் ஆம்னி திருடி செல்லப்பட்டது, பேக்கரி கடைகளில் தொடர்ந்து பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடைபெற்றதும் தொடர் திருட்டுகளுக்கு உதாரணம்.

இதே போல் கடந்த வாரம் திருச்செங்கோடு வட்டம் வையப்பமலை அருகே கூலித்தொழிலாளி வீட்டில் 41 பவுன் தங்க நகைகள், இருசக்கர வாகனங்கள் திருடப்பட்ட கும்பல் கைது செய்யப்பட்ட நிலையில் இராசிபுரம் பகுதியில் நடந்த இந்த தொடர் திருட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

கொலை, கொள்ளை சம்பங்களை குறைக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜேஷ் கண்ணா அவர்கள் போலீசாருக்கு அறிவுரை கூறி மெத்தனமாக செயல்படும் காவல்துறை அதிகாரிகளை களை எடுத்தால் மட்டுமே அவர் தலை தப்பும் என்கின்றனர் மேலதிகாரிகள்...