"ஸ்டாலின் ஒரு தத்தி"-பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் விமர்சனம்
சட்டமேதை அம்பேத்கர் ராமராஜையைத்தான் ஆதரித்தார்- பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் பேட்டி.

"ஸ்டாலின் ஒரு தத்தி"-பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம்
சட்டமேதை அம்பேத்கர் ராமராஜையைத்தான் ஆதரித்தார்- பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் பேட்டி...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு கொடுப்பதற்காக வந்திருந்த தேசிய விடுதலை வேங்கைகள் கட்சியினரிடம் அம்பேத்கர் படத்தை பெற்றுக்கொண்டு செய்தியாளர்களை சந்தித்த கே பி ராமலிங்கம் இவ்வாறு பேசினார் .
பட்டியலின மாநில தலைவர் தடா பெரியசாமி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கட்சியில் இணைந்தர்க்கு காரணம் அவர் கேட்ட பதவி கிடைக்கவில்லை என்பது தான் என்றார். சட்டமேதை அம்பேத்கர் ராமராஜியத்தை தான் ஆதரித்தார்... இது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல் திருமாவளவனுக்கும் தெரியும் . ஆனால் திமுகவுடன் சேர்ந்ததால் பொய்தான் பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
அம்பேத்கரின் உணர்வுகளை நேரடியாக பிரதிபலிக்கக் கூடிய பிரதமராக மோடி விளங்குகிறார் . அம்பேத்கருக்கு பாரத பிரதமர் செய்த மரியாதை இதுவரை எந்த பிரதமரும் செய்ததில்லை ... பட்டியலை இனத்தை சேர்ந்த தலைவர்களுக்கு மத்தியில் அதிக அதிகாரத்தை வழங்கியவர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி . எந்த நிலையிலும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் ஓட்டுக்கு பணம் தர மாட்டார்கள் ...
தமிழகத்தில் போதை மருந்து கடத்தி சம்பாதித்தவர்கள் தான் ஓட்டுக்கு பணம் தர முடியும் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி மக்கள் அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு கொடுக்கும் தண்டனையாக பாரதிய ஜனதா கட்சிக்கு ஓட்டு அளிக்க வேண்டுமென கூறினார்...
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் மோடியை எதிரியாக பாவிக்கிறார்கள் ஆனால் மக்கள் இவர்களை எதிரியாக பார்க்கிறார்கள்... கலைஞர் கீழ் வளர்ந்த எனக்கு இருக்கும் அறிவு கூட ஸ்டாலினுக்கு இல்லை கலைஞர் அடிக்கடி சொல்லுவார் அவன் ஒரு தத்தி என்று என விமர்சித்தார்...