செந்தில் பாலாஜியோ சிறையில்: சோகம் தாங்காத மின்வாரிய அதிகாரிகள் போதையில்...

பணி நேரத்தில் டாஸ்மாக் மதுபாரில் மின்வாரிய அதிகாரிகள் குடித்துவிட்டு கும்மாளம்

செந்தில் பாலாஜியோ சிறையில்: சோகம் தாங்காத மின்வாரிய அதிகாரிகள் போதையில்...
பணி நேரத்தில் டாஸ்மாக் மதுபாரில் மின்வாரிய அதிகாரிகள் குடித்துவிட்டு கும்மாளம்

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை சிறையில் அடைத்த சோகம் தாங்காமல் தினமும் மது குடிக்கும் மின்வாரிய அதிகாரிகள்...

இராசிபுரம்:டாஸ்மாக் பாரில் பணி நேரத்தில் மது குடித்து கும்மாளம் அடிக்கும் மின்வாரிய துறை அதிகாரிகளின் வீடியோ வைரல். கடந்த சில தினங்களுக்கு முன்பு டாஸ்மார்க் மதுபாரில் பணி நேரத்தில் மூன்று முக்கிய மின் வாரிய துறை அதிகாரிகள் மது குடித்துக் கொண்டிருந்த காணொளி தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது...

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நாமகிரிப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் மின்வாரிய செயல் பொறியாளர் அலுவலகத்தின் உதவி செயற்பொறியாளர் ராம்குமார் மற்றும் வணிக ஆய்வாளர் சிவக்குமார் முள்ளுக்குறிச்சி மின்வாரிய அலுவலக உதவி செயற்பொறியாளர் மகேந்திர மணி ஆகியோர் மதியம் ஒரு மணி அளவில் பணி நேரத்தில் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் ஜாலியாக மது அருந்தும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து மின்வாரிய ஊழியர்கள் கூறுகையில்:பணி நேரத்தில் இவர்கள் மது குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில் மது குடித்துவிட்டு ஊழியர்களை தகாத வார்த்தைகளில் திட்டுவதையும் அலுவலகத்திலேயே போதையில் படுத்து உறங்குவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் மேலும் மின்வாரிய அலுவலகத்திற்கு வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் அதிக அளவு கையூட்டு பெற்று இப்படி ஒரு உல்லாச வாழ்க்கை வாழ்வதாக குற்றம் சாட்டினர்.

பணி நேரத்தில் மின்வாரிய அதிகாரிகள் மது குடிக்கும் வீடியோ வைரலாகி வருவதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்...