151-வது ஆண்டாக தொடரும் இந்து, முஸ்லீம் இணைந்து கொண்டாடும் மத நல்லிணக்க சந்தணக்கூடு திருவிழா
ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையம் சிவசுப்ரமணியர் கோவிலில் 151-வது ஆண்டாக தொடரும் இந்து, முஸ்லிம் சமுதாய மக்களின் சந்தனகூடு மத நல்லிணக்க விழா

முருகன் கோவிலில் இந்து, முஸ்லீம் இணைந்து கொண்டாடும் மத நல்லிணக்க சந்தணக்கூடு திருவிழா.
ராசிபுரம்:ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையம் சிவசுப்ரமணியர் கோவிலில் 151-வது ஆண்டாக தொடரும் இந்து, முஸ்லிம் சமுதாய மக்களின் சந்தனகூடு மத நல்லிணக்க விழா.
சிறப்புமிக்க இந்த மத நல்லிணக்க விழாவில் இந்து,முஸ்லிம்கள் ஒன்றாக இணைந்து ஊர் முழுவதும் ஊர்வலமாக வந்து வீடுகளில் சந்தனம் பூசி, ஒருக்கு ஒருவர் மாலை மாற்றி சந்தனம் பூசி குழந்தைகளுக்கு துவா ஓதுவது சிறப்பு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையம் சிவசுப்ரமணியர் கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த மாதம் 15-3- 2024 தேதி துவங்கி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று (28-04 - 2024ம் தேதி) மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடந்தது.
இந்நிலையில், 151 -வது ஆண்டாக பாரம்பரிய ஹிந்து, முஸ்லிம் சமுதாய பெரியவர்கள் சந்தனம் பூசிக் கொள்ளும் வரலாற்று சறப்புமிக்க நிகழ்ச்சி நடந்தது. ராசிபுரம் கிழக்கு தெரு பள்ளி வாசலைச் சேர்ந்த DK.உஷேன் தலைமையில் இஸ்லாமியர்கள் குருசாமிபாளையம் வந்தனர். அங்குள்ள சிவசுப்ரமணியர் கோவிலில் இருந்து வெள்ளை கொடி ஏற்றி, மேளம் வாத்தியம் முழங்க வீடு மற்றும் கடைகளின் சுவர்களில் சந்தனத்தை பூசினர். பின்னர், செங்குந்தர் பாவடி மைதானத்தில் உள்ள சென்டா மரத்தில் (புளிய மரம்) வெள்ளைக் கொடியை ஏற்றினர். அப்போது, ஊர் பெரியதனக்காரர் ராஜேந்திரன் கைகளில் DK.உஷேன் சந்தனம் பூசினார். பின்னர் அவருக்கு ராஜேந்திரன் சந்தனம் பூசினார். ஒருவருக்கு ஒருவர் பூ மாலையை மாற்றிக் கொண்டனர். பாத்தியா ஓதி முஸ்லிம்கள் அங்கிருந்த மக்களுக்கு நாட்டுச் சர்க்கரை மற்றும் பொட்டுக் கடலை வழங்கினர். இந்துக்கள், முஸ்லிம் மக்களுக்கு விருந்து கொடுத்தனர். கடந்த, 151ஆண்டாக நடக்கும் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி அப்பகுதி அனைத்து சமூக மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து, விழாக்குழுவினர் கூறுகையில், குருசாமிபாளையம் பகுதியில், கைத்தறி நெசவு தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த தொழிலுக்கு, அச்சு கட்டி கொடுக்கும் தொழிலை முஸ்லிம்கள் செய்து வந்தனர்.
கடந்த, 120 ஆண்டுகளுக்கு முன் ஃபிளேக் நோயால் ஊர் மக்கள் பாதிக்கப்பட்டனர். அப்போது, முஸ்லிம் பெரியவர்கள், சென்டா மரம் எனக் கூறப்படும், புளிய மரத்தின் கீழ், நோயால் பாதிக்கப்பட்டவருக்கு பாத்தியா ஓதி பொட்டுக் கடலை மற்றும் நாட்டு சர்க்கரை கொடுத்தனர். அதனால் நோய் குணமானதாக, பெரியவர்கள் கூறிவருகின்றனர்.
ஒவ்வொரு பங்குனி உத்திரத் திருவிழாவிற்கு ஒரு வாரம் முன்பு, குருசாமிபாளையம் ஊர் பெரியவர்கள், ராசிபுரம் அச்சு கட்டித்தெரு கிழக்கு பள்ளிவாசலுக்கு, தேங்காய் பழம் தட்டுடன் வந்து, திருவிழாவுக்கு அழைப்பு விடுப்பர். அதன்பேரில், இரு சமுதாய மக்களிடையே, சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்றனர்.
#villigal #rasipuram #namakkal #festivel #religion #hindu #isslam