மகராஷ்டிராவில் ஏற்பட்ட பேருந்து விபத்திற்கு சாலை கட்டுமானம் காரணம் அல்ல - துணை முதலமைச்சர்

மகராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்திற்கு சாலை கட்டுமானம் காரணம் அல்ல என்று மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா என்ற பகுதியில் பேருந்தின் டயர் திடீரென வெடித்ததில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பேருந்து சாலையில் கவிழ்ந்து திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த பயங்கர தீ விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 32 பேர் பேருந்தில் பயணத்த நிலையில் அதிகாலை 2 மணி அளவில் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ₹50,000-மும் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இந்நிலையில், சம்ருத்தி நெடுஞ்சாலையில் பேருந்து விபத்துக்கு சாலை கட்டுமானம் காரணம் அல்ல என்று மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் " முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுடன் இன்று புல்தானாவில் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று, காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்திக்க உள்ளோம். சம்ருத்தி நெடுஞ்சாலையில் பேருந்து விபத்துக்கு சாலை கட்டுமானம் காரணம் அல்ல. விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் தேவைப்பட்டால் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு கூறினார்.