அங்கன்வாடி மையங்களில் வித்யரம்பம் நிகழ்ச்சி: ஆர்வத்துடன் குழந்தைகள் பங்கேற்பு
விஜயதசமியை முன்னிட்டு நாமக்கல்லில் உள்ள அங்கன்வாடி மையங்களில் வித்யாரம்பம் மூலம் மாணவர்கள் சேர்க்கை துவக்கம், அங்கன்வாடி மையங்களில் பெற்றோர்கள் ஆர்வமுடன் தங்கள் குழந்தைகளை சேர்க்கும் நிகழ்வு

நாமக்கல்லில் அங்கன்வாடி மையங்களில் வித்யரம்பம் நிகழ்ச்சி: ஆர்வத்துடன் குழந்தைகள் பங்கேற்பு
விஜயதசமியை முன்னிட்டு நாமக்கல்லில் உள்ள அங்கன்வாடி மையங்களில் வித்யாரம்பம் மூலம் மாணவர்கள் சேர்க்கை துவக்கம், அங்கன்வாடி மையங்களில் பெற்றோர்கள் ஆர்வமுடன் தங்கள் குழந்தைகளை சேர்க்கும் நிகழ்வு நடைபெற்றது.
ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகையின் போது பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் கல்வியை துவக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனையொட்டி இவ்வாண்டு இன்று விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு வித்யாரம்பம் மூலம் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைப்பெற்றது.
நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட ஆர்.பி.புதூர் அங்கன்வாடி மையத்தில் மழலையர் வகுப்புகளுக்கு சேர்க்கை நடைப்பெற்றது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பெற்றோர்கள் அங்கன்வாடி மையத்தில் தங்களது குழந்தைகளை சேர்த்தனர்.
இதனையொட்டி அங்கன்வாடி மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் மாநகராட்சி துணை மேயர் பூபதி கலந்து கொண்டார். அப்போது பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை மடியில் அமர வைத்து அரிசியில் முதல் தமிழின் முதல் எழுத்தான "அ" வை எழுதி தங்களது குழந்தைகளின் கல்வியை தொடக்கி வைத்தனர்.