அதிமுக ஆட்சிக்கு வந்தால் நகராட்சி மற்றும் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட கிராம ஊராட்சிகளை மீண்டும் பிரித்து மாற்றியமைக்கப்படும் : முன்னாள் அமைச்சர் தங்கமணி
முன்னாள் அமைச்சரும் நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளருமான தங்கமணி கலந்து கொண்டு திமுக அரசை விமர்சித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அதிமுக ஆட்சிக்கு வந்தால் நகராட்சி மற்றும் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட கிராம ஊராட்சிகளை மீண்டும் பிரித்து மாற்றியமைக்கப்படும் : முன்னாள் அமைச்சர் தங்கமணி
40 மாத காலமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாகவும் திமுக அரசைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில், இன்று, தமிழகம் முழுவதும், மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதன்படி நாமக்கல் நேதாஜி சிலை எதிரில் அதிமுக சார்பில் மனித சங்கிலி ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளருமான தங்கமணி கலந்து கொண்டு திமுக அரசை விமர்சித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சொத்து வரி, மின் கட்டணம் உயர்வு, தொழில் வரி, அத்தியாவசிய பொருட்கள் போன்றவை பன்மடங்கு உயர்ந்துள்ளதாகவும் தமிழகம் முழுவதும் போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்ததால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
கிராம ஊராட்சிகளை நகராட்சி மற்றும் மாநகராட்சியுடன் இணைப்பதால் 100 நாள் வேலை, வீட்டு வரி உயர்வு போன்றவற்றால் கிராம மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருவதாகவும் 2026-ல் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் தற்போது நகராட்சி மற்றும் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட கிராமங்களை மீண்டும் பிரித்து அமைக்கப்படும் என தெரிவித்தார்.
கடற்படையின் வான் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து பேசிய அவர், 2003-ல் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்ற போது ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, அனைத்து வசதிகளும் செய்யப்பட்டது. 10 லட்சம் பேர் கூடிய நிலையில் அவர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், மருத்துவ வசதிகள், கழிப்பிட வசதிகள் என அனைத்தும் முறையாக செய்யப்பட்டது.
ஆனால் தற்போது திமுக அரசு மக்களுக்கு தேவையான எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை, சுகாதார துறை அமைச்சர் கூட்ட நெரிசலில் மக்கள் உயிரிழக்கவில்லை, வெயிலின் தாக்கத்தால் மட்டுமே உயிரிழந்தார் என மக்களின் உயிரை பற்றி கவலைப்படாமல் கூறியுள்ளார். குடிநீர் வசதி மற்றும் மருத்துவ வசதிகள் செய்யாததால் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தார்.