குழந்தைகள் விற்ற கைவினை பொருட்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்ற வாடிக்கையாளர்கள்:

தற்போது புத்தகம் தாண்டி சமூகத்தை புரிந்து கொள்ளக் கூடிய அனுபவம் மூலம் கல்வி கற்பிக்கும் உத்தியை பயன்படுத்தி குழந்தைகளின் தன்னம்பிக்கையே வளர்க்கும் புதிய முயற்சியில் ஒரு புதிய தலைமுறையை உருவாக்கும் பணியை செய்து வருகிறது என்பதற்கு இந்நிகழ்ச்சியே ஒரு சாட்சி.

நாமக்கல்:குழந்தைகள் விற்ற கைவினை பொருட்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்ற வாடிக்கையாளர்கள்:

நாமக்கல் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனியார் பள்ளியைச் சேர்ந்த 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தாங்களே தயாரித்த கைவினைப் பொருட்களை கூவி, கூவி விற்பனை செய்த நிகழ்வு மிகவும் வரவேற்பை பெற்றது .

குழந்தைகளிடம் பொருட்களை பேரம் பேசி வாங்கிய வாடிக்கையாளர்கள்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலையில் அமைந்துள்ள ஸ்கூல் ஆஃப் மொண்டிசோரி சாம்போ என்ற தனியார் பள்ளியில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர் .

இந்தப் பள்ளியானது 2 மென்பொருள் பொறியாளர்களாக தொடங்கப்பட்டு தற்போது புத்தகம் தாண்டி சமூகத்தை புரிந்து கொள்ளக் கூடிய அனுபவம் மூலம் கல்வி கற்பிக்கும் உத்தியை பயன்படுத்தி குழந்தைகளின் தன்னம்பிக்கையே வளர்க்கும் புதிய முயற்சியில் ஒரு புதிய தலைமுறையை உருவாக்கும் பணியை செய்து வருகிறது என்பதற்கு இந்நிகழ்ச்சியே ஒரு சாட்சி.

பள்ளியின் உரிமையாளர்களான மென்பொருள் பொறியாளர்களாகிய தமிழ்வேந்தன் , சவிதா தம்பதியினர் கூறுகையில் :

குழந்தைகளின் எதிர்காலத்தை சீரானதாக வடிவமைக்க கூடிய புதுமையான தலைமுறையை உருவாக்க புத்தகக் கல்வி முறைகளுக்கு மாறாக ஒருங்கிணைந்த (ஹோலிஸ்டிக்) கற்றல் முறையை புகுத்தி தனிப்பட்ட ஆளுமை சமூக மற்றும் சுய விழிப்புணர்வு திறன்களை மேம்படுத்தி பள்ளியில் கற்பித்து வருகிறோம்.

நமது பள்ளியில் உள்ள வகுப்பில் மூத்தவர்களும் இளம் மாணவர்களும் குழந்தைகளும் ஒரே வகுப்பில் படிப்பதால், அனுபவம் மற்றும் கற்றல் ஒத்துழைப்பு என இயற்கையான வாய்ப்புகள் உருவாகிறது .

வயது அடிப்படையில் குழந்தைகளை பிரிக்காமல் குழந்தைகளை ஒன்றுபடுத்தி கல்வி கற்க்க வைப்பதால் அவர்களுடைய அறிவியல் வளர்ச்சியுடன் , சமூகம் மற்றும் நுண்ணறிவு திறன்களும் மேம்படுகிறது .

இதற்கு உதாரணமாக தான் நாமக்கல் தனியார் விடுதியில் நடைபெற்ற ப்ரென்டிங் சர்க்கிள் (NPC) நிகழ்வில், 5 வயதுக்குட்பட்ட மாணவர்கள் தங்கள் கைவினைப் பொருட்களை விற்பனை செய்து வணிக திறமைகளை வெளிப்படுத்தினர்.

மாணவர்கள் விற்பனை செயல்முறையின் அனைத்து அம்சங்களையும் பணவர்த்தனை மற்றும் பொதுமக்களுடன் தன்னம்பிக்கையாக பேரம் பேசி தங்களுக்கு மாற்று பணத்தையும் பெற்றனர். இந்த முயற்சி பள்ளி குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை, தொடர்பு திறன்கள் மற்றும் வாழ்க்கை திறமைகளை சிறப்பாக வழி நடத்தும் என பெற்றோர்கள் நம்புகின்றனர் என்றனர்.