ஒரே கல்லினால் ஆன 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் கோவில்

புரட்டாசி மாதம் சனிக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை : ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்

ஒரே கல்லினால் ஆன 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் கோவில்

புரட்டாசி மாதம் சனிக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை :ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்

நாமக்கல் கோட்டை சாலையில் புகழ்பெற்ற ஒரே கல்லினால் ஆன 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். புரட்டாசி மாதத்தை யொட்டி வைணவ தலங்களில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெறும்.

இந்நிலையில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது.

ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், தயிர், திருமஞ்சனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. வழக்கத்திற்கு மாறாக ஆஞ்சநேயர் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.