நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: அறிக்கை வெளியீடு
வருகிற 18-ம் தேதி நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்- கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.ஆர்.என்ராஜேஷ்குமார் எம்பி அறிக்கை

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: அறிக்கை வெளியீடு .
வருகிற 18-ம் தேதி நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்- கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.ஆர்.என்ராஜேஷ்குமார் எம்பி அறிக்கை:
இது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார்,வெளிட்ட அறிக்கையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வருகிற 18ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள, மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மாவட்ட திமுக அவைத்தலைவர் மணிமாறன் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன். எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி. கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவார்.
கூட்டத்தில், நாமக்கல் நகரில் பரமத்தி ரோட்டில் உள்ள செலம்பகவுண்டர் பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள, மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு, தமிழக முதலமைச்சர் வருகை குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.
சட்டசபை தொகுதியில், சட்டசபை தேர்தலுக்கான, பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், புதியவாக்காளர் நீக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக, தலைமை கழகம் மூலம், மாநில சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு செயலாளர் ஜான் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேந்தமங்கலம் சட்டசபை தொகுதிக்கு மாநில மகளிர் தொண்டரணி இணை செயலாளர் ரேகா பிரியதர்ஷினி, ராசிபுரம் சட்டசபை தொகுதிக்கு மாநில நெசவாளர் அணி செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கூட்டத்தில் மாநில தொகுதி பார்வையாளர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளனர். மேலும் கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட உள்ளது.
எனவே கூட்டத்தில் எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, டவுன் பஞ்சாயத்து நிர்வாகிகள், சார்பு அணியினர் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.