திமுக பேரிடியாகும் மின்கட்டண உயர்வு..மின்வாரிய அதிகாரிகள் லஞ்சம்..அரசின் மீது திரும்பும் பொதுமக்களின் கோபம்...

ELECTRICITY-TARIFF-INCREASE-TAMILNADU

திமுக பேரிடியாகும் மின்கட்டண உயர்வு..மின்வாரிய அதிகாரிகள் லஞ்சம்..அரசின் மீது திரும்பும் பொதுமக்களின் கோபம்...
: :

மின்வாரிய அதிகாரிகள் லஞ்சம்..அரசின் மீது திரும்பும் பொதுமக்களின் கோபம்...

உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் நொந்து போய் உள்ள பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளின் லஞ்ச லாவண்யதால் அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளனர் என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள் ...

சூரிய ஒளி மின் தகடுகள் அமைக்க ஆர்வம் காட்டும் பொதுமக்களிடம் மின்வாரியத்தில் உள்ள உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஐந்தாயிரம் வரை லஞ்சம் கேட்பதாக சோலார் பேனல் பொருத்தும் ஊழியர்கள் வருத்தம் தெரிவிக்கும் ஆடியோ தற்போது வைரலாகி உள்ளது.

திமுக பேரிடியாகும் மின்கட்டண உயர்வு..

தமிழகத்தில் மின் கட்டணம் அண்மையில் உயர்த்தப்பட்டது. மேலும் மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ள குடியிருப்பு பகுதியில் வணிக அடிப்படையிலான மின் கட்டணமாகவும் மாற்றப்பட்டுள்ளது. இதனால் மின் நுகர்வோர் பலரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் அலுவலக அதிகாரிகளின் கண்ணெதிரே உள்ள வீடுகளுக்கும அவர்களுக்கு தேவையானவைகளின் வீடுகளுக்கும் இந்த விதி பின்பற்றப்படவில்லை..

 ராசிபுரம் மின்வாரிய அலுவலகங்களில் பெயர் மாற்று முகாம் நடந்து வருகிறது. இதில் மின் இணைப்பு பெயர் மாற்றுவதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும் புகார் உள்ளது. இதனால் பொதுமக்களின் கோபம் அரசின் மீது திரும்பி உள்ளது. இதனால் பொதுமக்கள் பலர் மின் இணைப்பை தவிர்த்து சூரிய ஒளி மின் தகடுகள் அமைக்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆனால் இதற்கு அனுமதி பெறவும் ராசிபுரம் மின்வாரியத்தில் உள்ள AE, AD உள்ளிட்ட பணியாளர்கள் ரூ ஐந்தாயிரம் வரை லஞ்சம் கேட்பதாக சோலார் பேனல் பொருத்தும் ஊழியர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

மின்வாரிய ஊழியர்களின் இது போன்ற நிலை பொது மக்களிடம் அரசின் மீது கோபத்தை ஏற்

படுத்தி உள்ளது. இதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மின்கட்டண உயர்வு , மின்வாரியத்தில் லஞ்சம் போன்றவற்றால் அரசுக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.