நாமக்கல்:ஜேடர்பாளையம் நித்யா குடும்பத்திற்கு நிதி உதவி-அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்
தமிழக வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி நித்யா என்ற பெண் கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட நித்யாவின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் *நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர்.உமா* அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் *மாண்புமிகு வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன்* அவர்களும், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய *AKP.சின்ராஜ்* அவர்களும் மற்றும் திருச்செங்கோடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் *திரு.மதுரா செந்தில்* அவர்களும் கலந்துகொண்டு, ஜேடர்பாளையம் மேல்முகம் கிராமத்தில் கொலை செய்யப்பட்ட நித்யாவின் குடும்பத்திற்கு *முதலமைச்சர் பொதுநிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சத்திற்கான காசோலையை* வழங்கினார்கள்.
மேலும், உயிரிழந்த நித்யாவின் *இரு குழந்தைகளுக்கு கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சத்திற்கான* காசோலையும் வழங்கப்பட்டது.
இதேபோல் பெண் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து வடகரையாத்தூர் மேல்முகம் மற்றும் குன்னத்தூர் ஆகிய கிராமங்களில், நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது. இந்த கலவரத்தின்போது மர்ம நபர்களால் பல இடங்களில் பயிர்கள் சேதப்படுத்தப்பட்டன. சேதப்படுத்தப்பட்ட மரவள்ளி, வாழை மற்றும் பாக்கு மரங்கள் ஆகிய பயிர்களுக்கான, மொத்த நிவாரணத் தொகையான ரூ.6.95,232க்கான காசோலைகளை 5 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் பொது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கபிலர்மலை ஒன்றிய பொறுப்பாளர்கள் கோபால், யோகராஜ், தமரைச்செல்வன் மற்றும் கட்சியின் நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.