ராசிபுரம் அரசு போக்குவரத்து கழக கிளையில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு..
ராசிபுரம் அரசு போக்குவரத்து கழக கிளையில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கான குளிர் ஊட்டப்பட்ட ஓய்வறை திறப்பு..

ராசிபுரம் அரசு போக்குவரத்து கழக கிளையில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கான குளிர் ஊட்டப்பட்ட ஓய்வறை திறப்பு..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக (சேலம் ) கிளையான ராசிபுரம் அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஓய்வறையை மாநிலங்களவை உறுப்பினர் கே ஆர் என் இராஜேஷ்குமார் மற்றும் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் ஏ கே பி சின்ராஜ் ஆகியோர் திறந்து வைத்தார்.
நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ கே பி சின்ராஜ் தன்னுடைய சொந்த நிதியிலிருந்து ஒய்வறை கட்டிடத்திற்க்கு சுமார் 2.50 லட்சம் வர்ணம் பூசும் பணிகளுக்காக வழங்கினார்...
இதைத் தொடர்ந்து மூன்று குளிரூட்டும் இயந்திரங்களை வழங்கி ஓட்டுனர் நடத்துனவர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறையை மாநிலங்களவை உறுப்பினரும் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் கே ஆர் என் இராஜேஷ்குமார் இன்று பயன்பாட்டிற்கு அற்பணித்தார்.
நிகழ்ச்சியில் சேலம் மண்டல மேலாளர் பொன்முடி ,ராசிபுரம் மண்டல கிளை மேலாளர் சக்திவேல் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட ஓட்டுநர்கள் நடத்துனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.