ஆருத்ரா தரிசனம் | அண்ணாமலைப்பட்டி | தென் திருஅண்ணாமலை

ஆனந்தமா நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை

ஆருத்ராதரிசனம் | அண்ணாமலைப்பட்டி | தென் திருஅண்ணாமலை

ராசிபுரம் : தென் திருஅண்ணாமலை அருள் தரும் உண்ணாமுலை அம்மை உடனாகிய அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆனந்தமா நடராஜ பெருமானுக்கு பன்னிரு திரு முறைகள் பாடி திருவாதிரை தரிசனம்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அண்ணாமலைப்பட்டி பகுதியில் அமைந்து இருக்கும் தென் திருஅண்ணாமலை அருள் தரும் உண்ணாமுலை அம்மை உடனாகிய அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆனந்தமா நடராஜர் பெருமான், மாணிக்க வாசகர் மற்றும் சிவகாமி அம்பாள் உற்சவருக்கு வெகு விமர்சையாக விழா நடைபெற்றது.

இவ்வாலயத்தில் ஆனந்தமா நடராஜ பெருமானுக்கு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர தினத்தன்று ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு ஆனந்தமா நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை சிறப்பாக நடைபெற்றது.

 அதிகாலை 4:30 மணி அளவில் தொடங்கி ஆனந்தமா நடராஜர் பெருமான், மாணிக்க வாசகர் மற்றும் சிவகாமி அம்பாள் உற்சவருக்கு திருமஞ்சனம்,மஞ்சள்,சீகக்காய்,தேன், பஞ்சாமிர்தம், பால்,சந்தனம், திருநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து அர்ச்சனை செய்யப்பட்ட குடத்தில் உள்ள தீர்த்த நீரால் ஆனந்தமா நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.. மேலும், பூஜைகள் நடத்தப்பட்டு திருவாசகம் பாடல்கள் பாடி ஆனந்தமா நடராஜர் பெருமான், மாணிக்க வாசகர் மற்றும் சிவகாமி அம்பாள் மூவருக்கும் வண்ண வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர்,சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை காண்பிக்கபட்டு பக்தர்களுக்கு ஆனந்தமா நடராஜ பெருமான் ஆருத்ரா தரிசனத்தில் காட்சி அளித்தார்.. ராசிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சேர்ந்த 500 ககும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.