கோரக்கர் சித்தர் 5-ம் ஆண்டு குருபூஜை விழா
கொல்லிமலையில் நடைபெற்ற கோரக்கர் சித்தர் விழாவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.
கொல்லிமலை: கொல்லிமலையில், கோரக்கர் சித்தர் 5-ம் ஆண்டு குருபூஜை விழா...
கொல்லிமலையில் நடைபெற்ற கோரக்கர் சித்தர் விழாவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, கோரக்கர் சித்தர் வழிபாட்டு மன்றம் சார்பில் கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவில் மண்டபத்தில், பதினெண் சித்தர்களில் ஒருவரான மகான் கோரக்கர் சித்தருக்கு குருபூஜை விழா 28-ம் தேதி துவங்கி 29-ம் தேதி நள்ளிரவு வரை இரண்டு நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, 28 மாலை, 6:00 மணிக்கு, அறம்வளர்த்த நாயகி உடனுறை அறப்பளீஸ்வர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு, 8:00 மணிக்கு திருமுறை பாராயணம் நடைபெற உள்ளது. அக்., 29 காலை, 6:00 மணிக்கு கல் அத்திமரம் அடியில் வீற்றிருக்கும் சோரக்கர் சித்தருக்கு, கோமாதா பூஜை மற்றும் கொடியேற்றமும், 29-10-23 காலை 7:00 மணிக்கு பால்குடம், திருவீதி உலா, 8:00 மணிக்கு சங்கு பூஜை. திருமுறை பாராயணம், மகா வேள்வி நடைபெற்றது. 10:00 மணிக்கு அபிஷேகம். தீபாராதனை, மகேஷ்வர பூஜை நடை பெற்ற நிலையில் கோரக்கர் சித்தர் வழிபாட்டு மன்றம் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவசக்தி தெரு கூட்டம் சார்பில் திருவாசகம் முற்றோதுதல்,தர்மபுரி மாவட்டம் வாணி நடராஜ் நாட்டியாலயா குழந்தைகளின் பரதநாட்டியம்,சிவ திரு தியாகராசன் அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு,கிராமிய நடன நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றது. தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை உயர்நிலைக் குழு உறுப்பினர் சாந்தலிங்க மருதாசல அடிகளார்,குமரகுருபர சுவாமிகள், முத்துசிவராம சுவாமிகள் ஆகியோர் கலந்துகொண்டு பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினர்.