கொல்லிமலையில் வெளுத்து வாங்கிய கனமழை : நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு | kollihills
கொல்லிமலையில் பெய்த கனமழை காரணமாக ஆங்காங்கே தோன்றிய அருவிகளை சுற்றுலாப் பயணிகள் கண்ட ரசித்தனர்
கொல்லிமலையில் வெளுத்து வாங்கிய கனமழை : நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் மாலை பெய்த கனமழை காரணமாக ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம் அருவி, மாசிலா அருவி , சிற்றருவி போன்ற முக்கிய சுற்றுலா தளங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது .
கடந்த சில தினங்களாகவே விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில் மாலை பெய்த கனமழை காரணமாக மலை பாதைகளில் பல்வேறு பகுதிகளில் சிற்றருவிகள் உருவாகி ஆறு போல் ஓடியது.
கொல்லிமலையில் பெய்த கனமழை காரணமாக ஆங்காங்கே தோன்றிய அருவிகளை சுற்றுலாப் பயணிகள் கண்ட ரசித்தனர் .