"திருட்டு கணக்குக்கு எல்லாம் மத்திய அரசு பணம் தராது"....இவரே இப்படி சொல்லலாமா?

பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கே.பி.இராமலிங்கம் இராசிபுரத்தில் பகிரங்க பேட்டி.

'திருட்டு கணக்குக்கு எல்லாம் மத்திய அரசு பணம் தராது'...

ராசிபுரத்தில் பாஜக., மாநிலத் துணைத்தலைவர் K.P.இராமலிங்கம் பேட்டி...

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அதிசிந்தா திருமண மண்டபத்தில், சேலம் பெருங்கோட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

பாஜக., மாநில துணைத்தலைவர் K.P.இராமலிங்கம் தலைமை வகித்தார். இதில், பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகன், மாநில துணைத்தலைவர் வி.பி. துரைசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பாஜக., மாநில துணைத்தலைவரும், சேலம் பெருங்கோட்டப் பொறுப்பாளருமான K.P.இராமலிங்கம் பேட்டி அளித்தார். அப்போது, ராசிபுரம் அருகே மாணவி நீட் தேர்வால் தான் இறந்தார் என்பதெல்லாம் பொய். நீட் தேர்வில் திமுக., அரசு அரசியல் செய்கிறது. சென்னை வெள்ள பாதிப்பை திசை திருப்ப இதுபோன்று அயோக்கிய தனத்தை செய்கிறது. மத்திய அரசு கொடுத்த பணத்தை ஒழுங்காக செலவழிக்கப்பட்டதா. வெள்ளை அறிக்கை கொடுக்கட்டும். இதிலும் கொள்ளையடிக்கலாம், மாநாடு நடத்தலாம், ஒன்றறை லட்சம் பேருக்கு கறி சோறு போடலாம் என பார்கிறது திமுக. திருட்டு கணக்கு எழுவதில் திமுக வல்லமையாக உள்ளது. திருட்டு கணக்குக்கு எல்லாம் மத்திய அரசு பணம் கொடுக்காது.

சென்னை வெள்ள பணியில், மத்திய அரசு அதிகாரிகள், திமுக அரசை நல்ல அரசாங்கம் செய்கிறது எனக் கூறிவிட்டு செல்கின்றனர், என்ன நல்ல அரசாங்கம் செய்கிறது, தப்பு தான் செய்கிறது. செய்யாத பணிக்கு எல்லாம் பில்லு வாங்கி இருக்கிறார்கள். சென்னை வெள்ள பாதிப்பு, நிர்வாக திறமையற்ற முதல்வர் என்பதை காட்டுகிறது. என்னால் நிர்வாக செய்ய முடியவில்லை நான் முதலமைச்சராக இருந்துகொள்கிறேன், நிர்வாகத்தை மத்திய அரசு நேரடியாக எடுத்து ராணுவம் நிவாரண பணிகள் செய்யட்டும் என சொல்லட்டும் ராணுவத்துக்கு பணம் மத்திய அரசு தர சொல்லி பாஜக., போராடும். மக்களை பாதுகாக்க தெரியவில்லை, நீ கொள்ளையடிக்க மட்டும் பணம் கேட்கிற. முறையாக பணம் கேட்டால் முறையாக பணம் வரும் என காரசாரமாக பேட்டியளித்தார்.