உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?
முறையான பார்க்கிங் வசதி கூட இல்லாத ராசிபுரம் நகராட்சிக்கு மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்துச் செல்ல வந்த காருக்கு அடாவடியாக அபராதம் விதித்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் நடராஜன் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை
உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?போக்குவரத்து காவல்துறை அதிகாரியிடம் வாக்குவாதம் | வைரலாகும் வீடியோ.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கடைவீதி பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு வீல் சேரில் கொண்டு வந்த நோயாளியை ஏற்றுவதற்கு ஓரமாக நின்ற காருக்கு வழக்குப்பதிந்தே தீருவேன் என கார் உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போக்குவரத்து உதவி ஆய்வாளர் நடராஜன் என்பவரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ராசிபுரத்தில் தற்போது குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை திட்டம் என பல்வேறு பகுதிகளில் குழிகள் தோண்டப்பட்டு ஒவ்வொரு சாலையும் துண்டும் குழியுமாகவும் மோசமான நிலையில் உள்ளதால் பொதுமக்கள் கடந்த மூன்று மாதங்களாக கடுமையான இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். பல்வேறு பணிகள் நடைபெறுவதால் முக்கிய பிரதான சாலைகள் அடைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது இந்நிலையில் முக்கிய மருத்துவமனையில் உள்ள கடைவீதியில் இரண்டு புறமும் இருசக்கர வாகனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையெல்லாம் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்து வரும் நான்கு சக்கர வாகனங்களுக்கும் நோயாளிகளை ஏற்ற வரும் வாகனங்களுக்கும் அடாவடியாக பாதம் விதிப்பது எந்த விதத்தில் நியாயம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்? போக்குவரத்து விதிகளை மதிப்பது அனைவரின் கடமை என்றாலும் இன்று போக்குவரத்து விதிகளை மோட்டார் வாகனங்கள் கடைபிடிக்கின்றன வா என்பது கேள்விக்குறி? அதேபோல் போக்குவரத்து விதிகளை மீறும் அனைத்து வாகனங்கள் மீதும் வழக்கு பதிவு படுகிறதா என்றால் அதுவும் கேள்விக்குறி? இந்நிலையில் முறையான பார்க்கிங் வசதி கூட இல்லாத ராசிபுரம் நகராட்சிக்கு மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்துச் செல்ல வந்த காருக்கு அடாவடியாக அபராதம் விதித்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் நடராஜன் மீது தமிழக அரசு கடுமையான நடவடி